இலங்கைக்கு விஜயம் செய்துள்ள போர்த்துக்கல் பிரதமர் பெட்ரோ பாஸோஸ் கோல்ஹோவுடன் (Pedro Passos Coelho) இன்று இடம்பெற்ற சந்திப்பின் போதே ஜனாதிபதி இதனை தெரிவித்துள்ளார்.

433
  mullivaikkal3
இலங்கையின் நல்லிணக்கத்திற்காக அர்ப்பணிப்புடன் செயற்படுகிறேன்: ஜனாதிபதி
தாமும், தமது அரசாங்கமும் இலங்கையில் நல்லிணக்கத்திற்காக அர்ப்பணிப்பை மேற்கொண்டுள்ளதாக ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.
mulli-2

இலங்கைக்கு விஜயம் செய்துள்ள போர்த்துக்கல் பிரதமர் பெட்ரோ பாஸோஸ் கோல்ஹோவுடன் (Pedro Passos Coelho) இன்று இடம்பெற்ற சந்திப்பின் போதே ஜனாதிபதி இதனை தெரிவித்துள்ளார்.

இதன்போது கருத்துரைத்த போர்த்துக்கல் பிரதமர், தமது நாடு இலங்கையுடன் உறவை மேம்படுத்திக் கொள்ள ஆர்வமாக இருப்பதாக குறிப்பிட்டுள்ளார்.

இது பொருளாதாரத்தை மட்டும் இலக்காக கொள்ளாது, அரசியல் மற்றும் கலாசாரம் என்ற அடிப்படையிலும் அமைவதையே தாம் விரும்புவதாக போர்த்துக்கல் பிரதமர் தெரிவித்துள்ளார்.

images (7)mullivaikkal3

இலங்கைக்கு தமது முதலாவது பயணத்தை மேற்கொண்ட போர்த்துக்கல் பிரதமரிடம், இலங்கையில் நிலவிய பயங்கரவாத நிலை மற்றும் வடக்கு கிழக்கின் அன்றைய நிலை என்பவை தொடர்பில் ஜனாதிபதி விளக்கமளித்ததாக ஜனாதிபதியின் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.

வெளிநாட்டுத் தலைவர்கள் இலங்கைக்கு வருவது தமது சந்தோசத்தை அளிப்பதாக குறிப்பிட்ட ஜனாதிபதி மகிந்த, இதன்போதே இலங்கையின் உண்மை நிலவரங்களை அறிந்து கொள்ளக்கூடியதாக இருக்கும் என்று குறிப்பிட்டுள்ளார்.

TPNNEWS

SHARE