இலங்கையில் இடம்பெற்ற போர்க்குற்றங்கள் மற்றும் மனித உரிமைகள் தொடர்பான ஐ.நா. விசாரணை அறிக்கையை விரைவில் வெளியிடுமாறு வலியுறுத்தியும், இறுதிப் போரில் அரச படைகளின் ஈவிரக்கமற்ற தாக்குதலில் பாதிக்கப்பட்ட தமிழ் மக்களுக்கு நீதி கோரியும் யாழ். பல்கலைக்கழக சமூகத்தின் கவனயீர்ப்புப் போராட்டம் ஆரம்பமாகியது.
பேரணி இன்று செவ்வாய்க்கிழமை முற்பகல் 10 மணிக்கு யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் பிரதான வளாகத்தில் இருந்து ஆரம்பமாகி இராமநாதன் வீதியூடாக பலாலி வீதியை அடைந்து கந்தர்மடம் சந்தியில் திரும்பி நல்லூர் கோவிலின் வடக்கு வீதியை அடையும். அங்கு அமைப்புக் குழுவின் தலைவர் மட்டும் சிறுஉரை ஆற்றிய பின்னர் மகஜர் கையளிக்கப்படும். –