இலங்கையில் தலைதூக்கப்போகும் பாதாள உலகக்கோஷ்டி

346

UNP அரசாங்கத்தின் காலத்தில் பாதாள உலகக்கோஷ்டியினரின் பாதுகாப்புடன் அவ்வரசாங்கம் முன்னோக்கிச் சென்றது வரலாறு. UNP அரசாங்கத்திற்காக செயற்பட்டுவந்த பொட்டுநவ்பர், தெல்பாலா, ஜிந்துபிட்டி கண்ணா இவர்போன்று 15ற்கும் மேற்பட்ட பாதாள உலக்கோஷ்டியினைச் சேர்ந்தவர்கள் இவ்வரசின் ஆட்சிக்கு அக்காலத்தில் பக்கபலமாக இருந்தவர்கள். இவர்களை வைத்தே விடுதலைப்புலிகளும் பல்வேறு சாதனைகளை படைத்துவந்தார்கள்.

ஒரு நாட்டிற்கு பாதாள உலகக்கோஷ்டி என்பது அவசியமானதொன்று. அதனை இல்லாதொழித்து செயற்பட்டுவந்தவர் மஹிந்த ராஜபக்ஷ அவர்கள். இதன் காரணமாக அந்நிய நாட்டின் ஊடுருவல் நம் நாட்டில் அதிகரித்தது. மீண்டும் அவ்வாறானதொரு சூழ்நிலை ஏற்படுவதற்கான வாய்ப்புக்கள் இருந்து வருகின்றன. இதனால் குடு, கஞ்சா போன்ற போதைப் பொருட்கள் இந்நாட்டில் அதிகமாக பரவுவதற்கான வாய்ப்புக்கள் ஆரம்பிக்கும். இவ்வரசாங்கம் இதனை எவ்வாறு கையாளப்போகிறது என்பது கேள்விக்குறியாகவே இருக்கிறது.

SHARE