இஸ்ரேலிய பாலஸ்தீன பிரச்னையின் சமீபத்திய வெடிப்பு ஏன் என்று புரிந்துகொள்ள முயலலாம். அதற்கு முன்னால், வரலாறு முக்கியம்.

554

 

பாலஸ்தீன விடுதலைக்காக ஒரு காலத்தில் உரக்கக் குரல்கொடுத்த இந்தியா, நடுநிலைமையிலிருந்தும் அணி சாராத தன்மையிலிருந்தும் விலகுவது நியாயமில்லை. உலகின் ஒடுக்கப்பட்ட மக்களுக்காகக் குரல்கொடுப்பதும், அப்பாவிகளுக்கு ஆதரவாகக் களமிறங்குவதும் வெறும் சர்வதேச அரசியல் மட்டுமல்ல, தர்மமும்கூட. ”

ஆங்கில தி இந்து வில்
வெளியான தலையங்கம்
இவ்வாறு கூறுகிறது

However deplorable some of Hamas’ warfare techniques may be, there is a counter-view that in the overcrowded, narrow environs of the Gaza strip the Palestinian militant group has no operational option but to enmesh with the people.

(ஆங்கில தலையங்கத்திலிருந்துதான் தமிழ் தலையங்கம் மொழிபெயர்க்கப்பட்டிருக்கவேண்டும் என்று கருதுகிறேன். இருந்தாலும், தமிழ் தலையங்கம் ஆங்கில தலையங்கத்தில் இருக்கும் ஒரு சில இஸ்ரேல் சார்பு விஷயங்களையும் நீக்கி பாலஸ்தீன கொடி பிடிப்பதை பார்க்கலாம். நீங்களே இவ்விரண்டு தலையங்களையும் படித்து ஆறு வித்தியாசங்களுக்கு மேல் கண்டுபிடியுங்கள்)

மற்றொரு ஒரு பக்கச் சாய்வான செய்தியை
புதியதலைமுறை தொலைக்காட்சி

செய்தியில் பார்க்கலாம்.

“சமீபத்தில் 1947இல்” என்று இணையத்தில் டோண்டு ராகவன் எழுதிக்கொண்டிருந்தார். இஸ்ரேலுக்கு ஆதரவாக தமிழில் எழுதிய ஒரே ஒருவர் இவர்தான் இருப்பார் என்று நினைக்கிறேன். யாரோ ஒரு சிலர் இஸ்ரேல் தரப்பு நியாயத்தை எழுதியிருக்கலாம். மற்றபடிக்கு, தமிழ்நாட்டில் பத்திரிக்கை, தொலைக்காட்சி எல்லாவற்றிலும் நிரம்பியிருப்பது இஸ்ரேல் எதிர்ப்பும், பாலஸ்தீன ஆதரவுமே.

பாலஸ்தீன மக்கள் பாவப்பட்டவர்களாக பார்த்து, பணக்கார நம்பியாரிடம் அடிவாங்கும் ஏழை எம்ஜியாராக கற்பனை செய்துகொண்டு பாலஸ்தீனர்களுக்கு ஆதரவாக வரிந்துகட்டிக்கொண்டு பேசும் பலரில் ஒரு சதவீதத்தில் மூணே அரைக்கால் வீதத்தில் சுமார் 100 பேர்கள் தேறி, இஸ்ரேல் கன்ஸுலேட்டின் முன்னால் போராட்டம் பண்ணுவார்கள். தமிழ்நாட்டில் வஹாபி இயக்கங்களை சேர்ந்த ஓரிரண்டு கட்சிகளைச் சேர்ந்த தமிழர்கள், அமெரிக்க தூதரகத்தின் முன்னால் ஆயிரக்கணக்கில் கூடி கல்லெறிவார்கள். அப்படி எறிந்தால், அதற்கு இந்த அறிவுஜீவி பத்திரிக்கையாளர்கள் அதற்கான நியாயங்களை எழுதுவார்கள். உடல் சிதைந்த குழந்தைகள், முதியவர்கள் பெண்கள் என்று படங்களை வெளியிட்டு பச்சாத்தாபம் தேடுவார்கள். இரண்டு பக்கத்திலிருந்து ஊடக திரிப்புகளும், செய்தி போரும் நடந்தாலும், இடதுசாரிகள் துணையினாலும், இஸ்லாமியர்களது ஆதரவாலும், இஸ்லாமிய நாடுகளை பகைத்துகொள்ள விரும்பாமையாலும், பாலஸ்தீன செய்தி போரே வெற்றி பெற்றுள்ளது என்பதை அறியலாம். அந்த ஊடக தகிடுதித்தங்களை விட்டுவிட்டு இந்த இஸ்ரேலிய பாலஸ்தீன பிரச்னையின் சமீபத்திய வெடிப்பு ஏன் என்று புரிந்துகொள்ள முயலலாம். அதற்கு முன்னால், வரலாறு முக்கியம்.

இஸ்ரேலிய நாடு டேவிட், சாலமன் போன்றவர்கள் கையில் இருந்த காலத்தில் முழு இஸ்ரேலுமே யூதர்களாக இல்லை.

இதுதான் டேவிட் சாலமனின் இஸ்ரேலிய அரசு. இதில் பிலிஸ்தியா என்று கூறப்பட்டுள்ள இடத்தை கவனியுங்கள்.

david-Kingdom_of_Israel

ஆனால், சுமார் 2000 ஆண்டுகளுக்கு முன்னால், ரோமர்கள் முதலாவது யூதப்போரை நிகழ்த்தும்போது (இயேசுவின் காலம்) மிகக்குறைந்த அளவில் இருந்த சமாரியர்களையும், அங்கு வந்து தங்கிய கிரேக்கர்கள், சிரியர்களை தவிர மற்ற அனைவரும் ஜெருசலமை புனிதமாக கருதிய யூதர்களே.

லட்சக்கணக்கான யூதர்கள் கொல்லப்பட்ட அந்த போரின் முடிவில், மிகுந்திருந்த லட்சக்கணக்கான யூதர்களை அடிமைகளாக்கி விற்றது. யூதர்கள் என்று தங்களை அடையாளப்படுத்திகொள்பவர்களை கடுமையாக தண்டித்தது. அங்கிருந்து தப்பிய யூதர்களும், இந்தியாவை தவிர மற்ற எல்லா இடங்களிலும் கொடுமைக்குள்ளானார்கள். அடிப்படை உரிமைகள் மறுக்கப்பட்டார்கள். விவசாயம் செய்வது அவர்களுக்கு தடை செய்யப்பட்ட ஒன்று. அதாவது நிலம் வாங்க முடியாது. வட்டி கொடுத்து வாங்குவது, சாராயம் காய்ச்சுவது போன்ற விளிம்பு நிலை வேலைகள் இஸ்லாமிய நாடுகலிலும் கிறிஸ்துவ நாடுகளிலும் அவர்களுக்கு ஒதுக்கப்பட்டன. யூதர்களுக்கு எதிரான ஒரு கருத்துருவாக்கம் இன்றளவுக்கும் கிறிஸ்துவ முஸ்லீம் அவற்றின் ஆதரவாக இருக்கும் இடதுசாரிகளிடம் பார்க்கலாம்.

அந்த பேரழிவு ஆறாத வடுவாக யூதர்களிடம் இன்றும் இருக்கிறது. அங்கிருந்து அனைத்து யூதர்களும் சிதறடிக்கப்பட்டார்கள். யூத அடையாளமே அந்த நிலத்தில் இருக்கக்கூடாது என்று எடுத்துகொண்ட ரோமானியர்கள், இஸ்ரேல் என்று அவர்கள் அழைத்த நிலத்தை, பாலஸ்தீனம் என்று பெயர் மாற்றம் செய்தார்கள். இன்று காஸா என்று அழைக்கப்படும் நிலம் மட்டுமே ஒரு காலத்தில் பாலஸ்தீனம் என்று அழைக்கப்பட்டது. பிலிஸ்தியர்கள் என்ற பெயரில் இவர்கள் பழைய ஏற்பாடு பைபிளில் குறிப்பிடப்படுகிறார்கள். இடத்தின் பெயர் மட்டுமே பாலஸ்தீனம்.

மீண்டும் யூதர்கள் கிளர்ந்து எழுந்தார்கள் பொதுவருடம் 132த்தில் பார் கோக்பா என்பவரால் இரண்டாவது யூத சுதந்திர போர் துவக்கப்பட்டது. அதுவும் பெரும் தோல்வியில் முடிந்தது. நான்காவது நூற்றாண்டில் அங்கு கிரேக்கர்களும் ரோமானியர்களும் நுழைந்து குடியேறினார்கள். சமாரியர்கள் மிகச்சிறிய சிறுபான்மையினராக குறுகினார்கள்.

பொதுவருடம் 635இல் இந்த பகுதி முழுவது இஸ்லாமிய படைகளால் ஆக்கிரமிக்கப்பட்டது. அதன் பின்னால் சுமார் 1300 வருடங்களில் பெரும்பாலும் இஸ்லாமியரே ஆட்சி புரிந்திருக்கின்றனர். மிகக்குறுகிய காலம் ஜெருசலம் சிலுவைப்போர் வீரர்களிடம் இருந்திருக்கிறது.

இங்கே ஆட்சியை பிடித்த உம்மயாத், அப்பாஸித் வம்சங்கள் மதமாற்றத்தை ஊக்குவித்தாலும், கட்டாய மதமாற்றத்தை அதிகம் ஊக்குவிக்கவில்லை. அதே நேரத்தில் இஸ்ரேலில் தங்களது அரபு மக்களை குடியேற்றுவதிலும், இஸ்ரேலை முழுக்க இஸ்லாமிய மயமாக்குவதிலும் அரபு மொழி மயமாக்குவதிலும் தீவிரமாக ஈடுபட்டார்கள். (2)

ஒரு சில அரசர்கள் சிறுபான்மை சமாரியர்களை கூட விட்டுவைக்கவில்லை. இப்னு பிராசா என்பவரால் இந்த சமாரியர்களும் முஸ்லீம்களாக மதமாற்றம் செய்விக்கப்பட்டார்கள். (1) இந்த வரலாற்றினால், இஸ்ரேலிலிருந்து யூதர்கள் வெளியேறிகொண்டே இருந்தார்கள். ஐரோப்பா, இந்தியா போன்ற நாடுகளுக்கு குடிபெயர்ந்தார்கள்.

இன்றைய பாலஸ்தீனர்களை அந்த நிலத்தின் பழங்குடி மக்கள் என்று வர்ணிப்பது ஒரு நகைச்சுவை. இந்த பாலஸ்தீனர்கள் பெரும்பான்மை கடந்த 500 ஆண்டுகளில் இஸ்லாமிய கிறிஸ்துவ ஆட்சிகாலத்தில் அங்கு வந்தேறியவர்கள்தாம். அந்த இடத்தை கைப்பற்ற கிறிஸ்துவர்களும் அரபிகளும் சிலுவைப்போர்கள் புரிந்திருக்கிறார்கள். அரபு தேசங்களிலிருந்து அங்கு போர் புரிய வந்து வெற்றி கொண்டவர்கள் அங்கே தங்கினார்கள். ஒட்டோமான் ஆட்சியின் போது கிறிஸ்துவத்திலிருந்து இஸ்லாமிய மதமாற்றம் ஊக்குவிக்கப்பட்டது. துருக்கியிலிருந்தும் எகிப்திலிருந்தும் மக்கள் அங்கு குடியேற்றப்பட்டனர்.

பொதுவருடம் 1551இல் இஸ்ரேல் ஒட்டோமான் துருக்கி அரசு இஸ்ரேலை கைப்பற்றியது. ஒட்டோமான் அரசாங்கம் இஸ்ரேலுக்குள் துருக்கியினரும் எகிப்து அரபுகளும் வர ஏற்பாடு செய்தது.

ஆக, இதே 2000 வருட காலத்தில், இஸ்லாமிய அரசாங்கங்கள் கொடுத்த பாதுகாப்பினால், எகிப்திலிருந்தும், பஹ்ரேனிலிருந்தும், துருக்கியிலிருந்தும், அரபு தேசங்களிலிருந்தும் இங்கே முஸ்லீம்கள் வந்து ஆக்கிரமித்துகொண்டே இருந்திருக்கிறார்கள்.(4)

இங்கிருந்து சென்று கிறிஸ்துவ நாடுகளில் தஞ்சம் புகுந்த யூதர்களும் கடுமையான எதிர்ப்பையும் வெறுப்பையுமே சந்தித்தார்கள். முக்கியமாக. ருஷ்யர்களும் கிழக்கு ஐரோப்பியர்களும் யூதர்களை கடுமையாக வெறுத்தார்கள். அதற்கு காரணம், அவர்கள் விளிம்பு நிலை வேலைகளை செய்ய வைக்கப்பட்டதும், விவிலியத்தின் யூத வெறுப்பு பிரச்சாரமுமே என்றால் மிகையாகாது. (வட்டி கொடுப்பதும் வாங்குவதும் கிறிஸ்துவர்களுக்கு தடை செய்யப்பட்ட விஷயம். ஆனால், ஒரு நாட்டின் பொருளாதாரத்துக்கு வங்கி, வட்டி ஆகியவை இன்றியமையாதவை. ) விளிம்புநிலை வேலைகளைத்தான் அவர்கள் செய்யவேண்டும் என்று கட்டாயப்படுத்தப்பட்டார்கள். அந்த வேலைகள் செய்ததாலேயே அவர்கள் பொதுமக்களால் வெறுப்புக்குள்ளாக்கப்பட்டார்கள். கிறிஸ்துவம் யூத மதத்திலிருந்து தோன்றியிருந்தாலும், கிறிஸ்துவ மதத்தில் நிறுவனப்பட்ட யூத வெறுப்பு மிகவும் ஆழமானது, பலத்த விளைவுகளை உருவாக்கியது. யூதர்களை தனியாக அடைத்து சேரிகள் உருவாக்கியதிலிருந்து, அவர்கள் நாஸி வதை முகாம்களில் விஷவாயு செலுத்தி கொல்லப்பட்டதுவரை கிறிஸ்துவம் யூதர்கள் மீது நடத்திய வன்படுகொலை சொல்லும் தரமன்று.

மேற்கண்ட இணைப்புகளில், மிகவும் குறைந்த அளவுக்கு அவர்கள் மீதான கிறிஸ்துவ வெறுப்பின் மத அடிப்படையும், அதன் விளைவுகளும், போப்புகள் அது சம்பந்தமாக வெளியிட்ட அறிக்கைகளின் குறிப்புகளும் இருக்கின்றன.

1881இல் ரஷிய அரசர் கொல்லப்பட்டார். ரஷிய ஆளும் வர்க்கம் உடனே இந்த பழியை யூதர்கள் மீது போட்டது. யூதர்களுக்கு எதிராக சட்டங்கள் இயற்றப்பட்டன. அவர்களை அழித்தொழிக்க கும்பல்கள் கிளம்பின. இதனால், கிழக்கு ஐரோப்பா, ரஷியாவிலிருந்து சுமார் 3.5 மில்லியன் யூதர்கள் வெளியேறினார்கள். இதில் 2 மில்லியன் யூதர்கள் அமெரிக்காவுக்கு சென்றார்கள். வெறும் 25000 பேர்களே ஒட்டோமான் ஆண்ட பாலஸ்தீனத்துக்கு சென்றார்கள்.
(இது முதல்
ஆலியா
என்று அழைக்கப்படுகிறது)

1917இல் பாலஸ்தீனத்தை இங்கிலாந்து கைப்பற்றியது. 1922இல் லீக் ஆஃப் நேஷன்ஸ் (முன்னால் ஐ.நா) பாலஸ்தீனம் மீது இங்கிலாந்தின் ஆளுமையை உறுதி செய்தது.

ஜெர்மனியில் நாஸிஸத்தின் எழுச்சி, மேலும் அதிகமாக யூதர்களை இஸ்ரேலுக்கு துரத்தியது. ஏறத்தாழ 1 மில்லியன் யூதர்கள் இஸ்ரேலுக்கு இந்த காலத்தில் வந்தார்கள். இந்த சமயத்தில் இஸ்ரேலில் யூதர்களின் எண்ணிக்கை 33 சதவீதமாக இருந்தது. இங்கு வந்த யூதர்கள் ஏராளமான வேலை வாய்ப்புக்களை உருவாக்கியதால், அதில் பயன்பெற்றுகொள்ள சுமார் 50000 அரபுகள் இஸ்ரேலுக்குள் வந்ததாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

இரண்டாம் உலகப்போரின் முடிவில், பாலஸ்தீன பகுதியிலிருந்து தான் விலகிகொள்வதாகவும், யூதர்களுக்கும் பாலஸ்தீனர்களுக்கும் சுமுகமான ஒரு முடிவை தன்னால் எட்ட முடியவில்லை என்றும் இங்கிலாந்து கூறியது.

யூத தோரா எதிர்பார்க்கும் மெஸியாவை நம்பாமல், தாங்களே முயன்று, ஒரு யூத நாட்டை ஏற்படுத்தி அங்கு சென்று தங்கமுடியும் என்ற நம்பிக்கையுடன் தோற்றுவிக்கப்பட்ட இயக்கமே ஜயனிஸம். இதனை தோற்றுவித்தவர்கள், சேர்ந்தவர்கள், தலைவர்கள் ஆகியோரில் பெரும்பான்மையினர் கம்யூனிஸ்டுகள். மத ஆர்வமற்றவர்கள். பலர் நாத்திகர்கள். இரண்டாம் உலகப்போரின் முடிவில் ஜயனிஸ்டுகள், யூதர்களுக்கென்று ஒரு நாட்டை, அவர்கள் சுயாதீனத்துடன் வாழ புராதன வீடான இஸ்ரேலில் அமைக்க வேண்டும் என்று முனைந்தார்கள். யூத மத கொள்கையின்படி, கடவுளின் அருள் படைத்த மெஸியா ஒருவர் (அல்லது இருவர்.ஒருவர் ராணுவ தலைமை, மற்றவர் ஆன்மீக தலைமை) இஸ்ரேலிய நாட்டை அமைப்பார்கள். (அன்றைய) ரோமர்களை தோற்கடிப்பார்கள். அதன் பின்னால், உலக நாடுகள் இஸ்ரேலுக்கு தலைவணங்கும். இது பழைய ஏற்பாடு என்று அழைக்கப்படும் தோராவிலும், புதிய ஏற்பாடு என்று அழைக்கப்படும் இயேசு கிறிஸ்து கதையிலும் காணலாம்.

டேவிட் பென் குரியன்
தலைமை ஏற்ற
யூத அமைப்பு
(Jewish Agency)
பன்னாட்டு அரசியல் தலைவர்களிடம் பேசி, நடையாய் நடந்து தங்களுக்கென்ற ஒரு நாட்டை பெற்றார்கள். இஸ்ரேல் அன்று இங்கிலாந்தின் கட்டுப்பாட்டில் இருந்தது. இங்கிலாந்து அப்படி ஒரு யூத நிலத்தை உருவாக்க ஒப்புகொண்டது. அது
பெல்பார் அறிவிப்பு
என்று அழைக்கப்படுகிறது. ஐக்கிய நாடுகள் சபை முன்னாள் இஸ்ரேலை, அன்னாள் பாலஸ்தீனத்தை இரண்டாக பிரித்தது. (பிரித்த படத்தை காண்க)

UN_Partition_Plan_For_Palestine_1947
இந்த படத்திலிருந்தே இரண்டு நாடுகளுமே சீரான தொடர்ந்த தெளிவான எல்லைக்கோடுகள் இல்லாமல் ஒருவரை ஒருவர் தாக்கும் அமைப்புடனேயே இருப்பதை காணலாம். (இந்தியாவை உடைத்து பாகிஸ்தானை இந்தியாவின் இரண்டு பக்கமும் வைத்ததை நினைவு கூருங்கள்.)

வளமையான மூன்று பகுதிகள் பாலஸ்தீன பகுதிகளாக அறிவிக்கப்படுகின்றன. பாலைவனமான பகுதிகள் இஸ்ரேல் என்று அறிவிக்கப்படுகின்றன. (வளமையான சிந்து பகுதியும், கங்கை டெல்டா பகுதியான வங்காளமும் பாகிஸ்தானாக அறிவிக்கப்பட்டன என்பதையும் நினைவு கூருங்கள். நியாயமாக பார்த்தால், சிந்து நதிக்கு இந்தப்பக்கம் இருந்த பஞ்சாப் இந்துக்கள் அதிகம் கொண்டது. சிந்து நதிக்கு இந்தப் பக்கம் இருந்த சிந்து மாகாண பகுதி அதிக இந்துக்களை கொண்டது. சிந்து நதியே எல்லைக்கோடாக ஆக்கப்பட்டிருக்கவேண்டும். ஆனால் பிரிவினையின் போது முழு சிந்து மாகாணமுமே பாகிஸ்தானாக அறிவிக்கப்பட்டது. அது பின்னர் ஒரு நேரத்தில் எழுதப்பட வேண்டியது.)

பாலஸ்தீனர்களுக்கு சுதந்திரமான ஒரு நாடும், இஸ்ரேலியர்களுக்கு சுதந்திரமான ஒரு நாடும், ஜெருசலம் தனி நகரமாகவும் பிரிக்கப்படும் என்று ஐ.நா முடிவெடுத்தது.

இதனை யூதர்கள் ஒப்புகொண்டார்கள். பாலஸ்தீனர்கள் சார்பாக
அரபு லீகும்,
அரபு ஹயர் கமிட்டி
என்பதும் நிராகரித்தன. டிசம்பர் 1947இல் அரபு லீக் யூதர்களை தாக்க அறைகூவல் விடுத்தது. ஏராளமான யூதர்கள் தாக்கப்பட்டார்கள். உள்நாட்டு போர் துவங்கியது. பாலஸ்தீனர்களது அரபு பொருளாதாரம் வீழ்ச்சியடைந்தது. சுமார் 250000 பாலஸ்தீன அரபுகள் வெளியேறினர்.

14 மே 1948இல் டேவிட் பென் குரியன், ஐநா கொடுத்த எல்லைக்கோடுகளோடு, சுதந்திர இஸ்ரேல் நாட்டை பிரகடனம் செய்தார்.

அடுத்த நாள், எகிப்து, சிரியா, ஜோர்டான், ஈராக் ஆகிய நாடுகள் இந்த புது நாட்டின் மீது போர் தொடுத்தன. இது 1948- அரபு இஸ்ரேலிய போர் என்று அழைக்கப்படுகிறது. சவுதி அரேபியா தன் படைகளை எகிப்து கீழ் பணியாற்ற அனுப்பி வைத்தது.

இதுதான் இஸ்ரேலும் அதன் அருகாமை அரபு நாடுகளும், முஸ்லீம் நாடுகளும்.

israelarab

ஒரு வருட போருக்கு பின்னால், போர் நிறுத்த ஒப்பந்தம் உருவானது. ஜோர்டான் மேற்குக்கரை என்று சொல்லப்படும் west bank ஐ தன்னுடன் இணைத்துகொண்டது. எகிப்து காஸா பகுதியை தனக்கென எடுத்து தன்னுடன் இணைத்துகொண்டது. இந்த போரினால், சுமார் 7 லட்சம் பாலஸ்தீனர்கள் இஸ்ரேலிலிருந்து ஓடினார்கள், அல்லது துரத்தப்பட்டார்கள் என்று மதிப்பிடப்படுகிறது.
http://en.wikipedia.org/wiki/Green_Line_(Israel)

இந்த போரின் முடிவில் இஸ்ரேலின் எல்லைகள் விரிவாக்க அங்கீகரித்தன ஜோர்டனும் எகிப்தும்.

150px-Israel_green_lines

மேற்குக்கரையை ஜோர்டன் எடுத்துகொண்டது. கீழே காஸா பகுதியை எகிப்து தன்னுடன் இணைத்துகொண்டது.

ஆறுநாள் போர்.
இஸ்ரேல் தோற்றத்தின் முதற்கொண்டு இஸ்ரேலுக்கும், அருகாமையிலிருந்த அரபு நாடுகளுக்கும் ஜோர்டான் ஆற்றின் நீரை எப்படி பகிர்ந்துகொள்வது என்ற பிரச்னை இருந்தது. இஸ்ரேலுக்கு ஒரு சொட்டு தண்ணீர் கூட போகக்கூடாது என்று சிரியா, ஜோர்டான் ஆகிய நாடுகள் முனைந்தன. இஸ்ரேல் தனக்கு அந்த ஆற்று நீர் வேண்டும் என்று பல முயற்சிகள் எடுத்தது. அரபு தேசியவாதிகளான நாஸர் போன்றோர்கள் இஸ்ரேல் என்ற ஒரு நாடே இருக்ககூடாது என்று முனைந்தார்கள். அருகாமையில் உள்ள எந்த நாடுமே இஸ்ரேலை ஒரு சுதந்திர நாடாக அங்கீகரிக்கவில்லை. செங்கடலில் இஸ்ரேல் கப்பல்கள் வரக்கூடாது என்று எகிப்திய படைகள் தடுத்தன. 1966இலிருந்தே எகிப்திய படைகளும் இஸ்ரேலிய படைகளும் எல்லையில் மோதிக்கொண்டே இருந்தன. மே 1967இல் அரபு நாடுகள் தங்களது படைகளை இஸ்ரேலுக்கு எதிராக ஒருங்கிணைக்க துவங்கின. இதனை கண்ட இஸ்ரேல், அவர்கள் தாக்குமுன்னர் தாம் தாக்க வேண்டுமென்று அதிரடியாக 5 ஜூன் 1967இல் சிரியா, எகிப்து, ஜோர்டன், ஈராக் ஆகிய நாடுகளை ஒரே நேரத்தில் தாக்கியது. ஆறு நாள் நடந்த போரில், சினாய் தீபகற்பம், மேற்குக்கரை, காஸா, கோலன் உச்சிகள் ஆகியவற்றை கைப்பற்றியது. எதிரி நாடுகள் படுதோல்வி அடைந்தன. கிரீன் லைன் என்று அழைக்கப்பட்ட முன்னால் எல்லைக்கோடு இஸ்ரேலின் அதிகாரப்பூர்வ எல்லையாகவும், இந்த ஆறு நாள் போரில் கைப்பற்றப்பட்ட பகுதிகள் ஆக்கிரமிக்கப்பட்ட பகுதிகள் என்றும் அறிவிக்கப்பட்டன.

Six_Day_War_Territories

இதுதான் ஆறு நாள் போர் முடிவில் இஸ்ரேலின் அதிகாரத்தின் கீழ் உள்ள பகுதிகள்.

இதுதான்போரின் முடிவில் இஸ்ரேலின் எல்லைகள். இதில் மேற்குக்கரை, கோலன் உச்சிகள், சினாய் தீபகற்பம், காஸா அனைத்துமே இஸ்ரேல் வெற்றிகொண்ட பகுதிகளாக இருப்பதை கவனியுங்கள்.

பாலஸ்தீனத்திலிருந்து வெளியேறி மத்திய கிழக்கில் பரந்து கிடந்த மாணவர்களால் 1959இல் துவக்கப்பட்ட வன்முறை அமைப்பு ஃபாடா. அதன் தலைவராக இருந்த யாசர் அராஃபத்தை பலரும் அறிந்திருப்பார்கள்.

PLO பிஎல் ஓ என்ற அமைப்பு 1964இல் அரபு லீகால் கெய்ரோ, எகிப்தில் தோற்றுவிக்கப்பட்டது. இதன் ஆரம்பமே, வன்முறை மூலம் பாலஸ்தீனத்துக்கு இஸ்ரேலியர்களிடமிருந்து விடுதலை பெற்றுத்தருவதை உறுதி செய்தது. இது அரபிய தேசியத்தை அடிப்படையாக கொண்டது (இஸ்லாம் அல்ல). அரபியர்கள் அனைவரும் ஒரே நாட்டின் கீழ் ஒரே தலைமையின் கீழ் வாழவேண்டும் என்ற நோக்கத்தை கொண்ட அரபு தேசிய வாதத்தின் ஊற்றுக்கண்ணாக இருந்தவர்கள் மார்க்ஸியர்கள். இதில் முக்கியமானவர் ஜார்ஜ் ஹபாஷ். (பாலஸ்தீனத்தை சேர்ந்தவர். பிறப்பால் ஆர்த்தடாக்ஸ் கிறிஸ்துவர்) இன்றும் கூட ஃபடா தன்னை மதச்சார்பற்றதாகவும், அரபு தேசியவாதத்துடனும் சோசலிசத்துடனும் பிணைத்துகொள்கிறது. 1967இல் ஆறு நாள் போரின் முடிவில், ஃபாடா பிஎல் ஓவுடன் இணைந்தது. யாசர் அராபத் பி எல் ஓவின் தலைவரானார்.

ஆறு நாள் போருக்கு பிறகு பி எல் ஓ ஒரு பயங்கரவாத இயக்கமாக தன்னை அடையாளப்படுத்திகொண்டது. இஸ்ரேலின் சாதாரண குடிமக்களை தாக்குவதையும், இஸ்ரேலிய விளையாட்டு வீரர்களை கொல்வதையும், இஸ்ரேலிய விமானத்தை கடத்துவதையும் முழு நேர வேலையாக எடுத்துகொண்டது.

1973இல் யூதர்கள் யோம் கிப்பூர் விரதம் அனுசரித்துகொண்டிருந்தபோது, எகிப்தும், சிரியாவும் ஒருங்கிணைந்து இஸ்ரேல் மீது அதிரடி தாக்குதலை தொடுத்தன. எகிப்து சினாய் தீபகற்பத்தை ஆக்கிரமிக்க முயன்றது. சிரியா கோலன் உச்சிகளை கைப்பற்ற முனைந்தது. இஸ்ரேல் தன்னை தற்காத்துகொண்டாலும், பெருத்த உயிர் இழப்புகளை தாங்கவேண்டி வந்தது. இதனால் பிரதமர் கோல்டா மேயர் பதவி துறந்தார்.

1978இல் கேம்ப் டேவிட் அமைதி ஒப்பந்தத்தை அமெரிக்கா முன்னின்று ஏற்படுத்த, இஸ்ரேல் பிரதமர் மெனக்கம் பெகினும் எகிப்து தலைவர் அன்வர் சதாத்தும் கை குலுக்கினார்கள். 1979இல் இஸ்ரேல் எகிப்து அமைதிக்காக, தான் வெற்றிபெற்ற
சினாய் தீபகற்பத்தை
எகிப்துக்கு விட்டுக்கொடுத்தது இஸ்ரேல். அதுவரை அங்கே உருவாகியிருந்த
இஸ்ரேலிய குடியிருப்புகளை (Israeli settlements) வலுக்கட்டாயமாக நீக்கி அவர்களை இஸ்ரேலுக்குள் அழைத்துகொண்டது.

(இஸ்ரேலிய குடியிருப்புகள்
காஸா பகுதியிலும், மேற்குக்கரை பகுதியிலும் அதுவரை இருந்த இஸ்ரேலிய அரசுகள் உதவியுடன் கட்டப்பட்டு வந்திருக்கின்றன. 2005இல் தானாக முன்வந்து
அந்த குடியிருப்புகளை நீக்க முனைந்தது. இது
சுயமான போர்தவிர்ப்பு திட்டம்
unilateral_disengagement_plan.
பாலஸ்தீனம் அமைதிவழியை தேர்ந்தெடுக்காமல், தானாக நாடு பிரகடன கோரிக்கையை 2011இல்
ஐநாவில் வைத்தபோது, அதற்கு எதிர்ப்பாக, மேலும் இஸ்ரேலிய குடியிருப்புகளை மேற்குக்கரையிலும் காஸாவிலும் கட்டுவோம் என்று அறிவித்தது)

மார்ச் 1978இல் பி எல் ஓ பயங்கரவாதிகள் இஸ்ரேலிய குடிமக்கள் 47 பேரை கொன்றார்கள். அதற்கு பதிலடியாக தெற்கு லெபனாலில் பி எல் ஓக்களுக்கு இருந்த முகாம்களை அழிக்க தெற்கு லெபனானை கைப்பற்றியது இஸ்ரேல்.

oslo-agreement1992இல் யிட்சக் ராபினும், யாசர் அராபத்தும்ஓஸ்லோ ஒப்பந்தத்தை
ஒப்புகொண்டார்கள். மேற்குக்கரை, காஸா இரண்டையும் சுயாதீனம் கொண்ட நிலங்களாக பி எல் ஓவிடம் கொடுப்பதாக ஒப்புகொண்டது. அதற்கு பதிலாக பி எல் ஓ, இஸ்ரேலுக்கு அங்கீகாரம் வழங்கியது. பி எல் ஓவுடன் அமைதிக்காக, நிலங்களை கொடுக்க இஸ்ரேல் ஒப்புகொண்டது. இதே போல சிரியாவிடம் நிரந்தர அமைதி கிடைத்தால் கோலன் உச்சிகளை கொடுப்பதாகவும் யிட்சக் ராபின் கூறியிருக்கிறார். ஜோர்டனும் இஸ்ரேலை அங்கீகரித்தது. ஆனால், பி எல் ஓவின் தொடர்ந்த தற்கொலைப்படை தாக்குதல்களால், இந்த ஒப்பந்தங்களுக்கான ஆதரவு இஸ்ரேலிய பொதுமக்களிடம் குறைய ஆரம்பித்தது. இந்த அமைதி ஒப்பந்தங்கள் இஸ்ரேலிய மக்களிடம் கோபத்தையும் ஏற்படுத்தின. 1995இல் யிட்சக் ராபின் இந்த ஒப்பந்தங்களை எதிர்த்த இஸ்ரேலியரால் சுட்ட்டுக்கொல்லப்பட்டார்.

பிறகு பிரதமரான யஹூத் பராக், தெற்கு லெபனானிலிருந்து இஸ்ரேலிய படைகளை திரும்ப பெற்றார். அமைதிக்காக, யாசர் அராபத்துடன் 2000 கேம்ப் டேவிட் பேச்சுவார்த்தைகளை நடத்தினார். சுதந்திர பாலஸ்தீன நாட்டுக்கான வரையறையை யாசர் அராபத்திடம் அளித்தார். அந்த வரையறையை யாசர் அராபத் நிராகரித்தார்.

ஏரியல் ஷரோன் பிரதமராக ஆனதும், காஸா பகுதியில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த இஸ்ரேலிய போர்வீரர்களை திரும்ப பெற்றார். மேற்குக்கரையை சுற்றிலும் சுவரெழுப்பினார். இது இரண்டும் யாசர் அராபத் ஆரம்பித்த இரண்டாவது இண்டிபாடாவை தோல்வியுறச்செய்தது.

செப்டம்பர் 2007இல் சிரியாவின் அணு உலையை தாக்கி அழித்தது.
**
யாசர் அராபத்தின் மறைவுக்கு பிறகு மஹ்மூது அப்பாஸ் பி எல் ஓ, ஃபாடா இரண்டுக்கும் தலைவரானார். இவர் யாசர் அராபத்த்தை விட மிதவாதியாகவும் அறியப்படுகிறார்.

abbas

 

அரசியல் இஸ்லாமை அடிப்படையாக கொண்ட முஸ்லீம் பிரதர்ஹூட் அமைப்பின் தோற்றமும் வளர்ச்சியும் சவுதி பணம், வளைகுடா வஹாபி ஆதரவு என்ற அடிப்படையில் தோன்றி, எகிப்து போன்ற நாடுகளில் வலுப்பெற்றது.

yassinமுஜமா அல் இஸ்லாமியா என்ற இஸ்லாமிய சேவை அமைப்பை நடத்திவந்த ஷேக் அஹ்மது யாஸின் காஸா பகுதியில் முஸ்லீம் பிரதர்ஹூட் அமைப்பின் பிரதேச கிளையை நடத்திவந்தார். இவரது சேவைஅமைப்புக்கு இஸ்ரேல் அரசாங்கமே 1979 வரைக்கும் சேவை அமைப்பாக அங்கீகாரமும், காஸா பகுதி மக்களுக்கு உதவ இவர்களுக்கு பண உதவியும் அளித்திருக்கிறது. இந்த அமைப்பு காஸா பகுதியில் மசூதிகளை கட்டவும், பள்ளிக்கூடங்களை கட்டவும், நூலகங்களை அமைக்கவும் இஸ்ரேல் உதவியிருக்கிறது. யாஸினுக்கு மருத்துவ உதவிக்காக இவரை இஸ்ரேலுக்கு அழைத்து சென்று மருத்துவ உதவியும் செய்திருக்கிறது.

 

 

TPN NEWS

SHARE