உலகெங்கும் இருந்து இயக்கத்தின் அங்கத்தவர்களும் இலங்கையிலிருந்து மாவை சேனாதிராஜா மற்றும் சிவஞானம் சிறீதரன் ஆகிய பாராளுமன்ற உறுப்பினர்களும் தமிழ்நாடு எஸ்ஆர்எம் பல்கலைக்கழகத்தின் வேந்தர் பாரிவேந்தர், மற்;றும் பதிவாளர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.

351

 

southafrica_tamil_001

உலகத் தமிழ் பண்பாட்டு இயக்கத்தின் தென்னாபிரிக்க கிளை கடந்த வாரம் வரலாற்று முக்கியத்துவம் மிக்க ஒரு கல்விப் பணியின் பலனை அறுவடை செய்யும் அற்புதமான நிகழ்வை தென்னாபிரிக்காவின் டர்பன் நகரில் நடத்தியது.

தமிழ் மொழி அழிந்துவிடுமோ என்று அனைவரும் அஞ்சும் நிலை தென்னாபிரிக்காவில்  நிலவுகின்றது.

இந்த நிலையில் அங்கு இயங்கிவரும் உலகத் தமிழ் பண்பாட்டு இயக்கத்தின் தென்னாபிரிக்க கிளை ஏற்பாடு செய்த அங்குள்ள தமிழ் ஆசிரியர்களுக்கான டிப்ளோமா சான்றிதழ் வழங்கும் பட்டமளிப்பு விழா அண்மையில் இடம்பெற்றது.

இந்த நிகழ்வில் உலகெங்கும் இருந்து இயக்கத்தின் அங்கத்தவர்களும் இலங்கையிலிருந்து மாவை சேனாதிராஜா மற்றும் சிவஞானம் சிறீதரன் ஆகிய பாராளுமன்ற உறுப்பினர்களும் தமிழ்நாடு எஸ்ஆர்எம் பல்கலைக்கழகத்தின் வேந்தர் பாரிவேந்தர், மற்;றும் பதிவாளர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.

தமிழ்நாடு எஸ்ஆர்எம் பல்கலைக்கழகத்தின் தமிழ்ப் பிரிவின் பேராசிரியர் இல. சுந்தரம் அவர்களின் வழிகாட்டலில், உலகத் தமிழ் பண்பாட்டு இயக்கத்தின் கல்விப் பொறுப்பாளரும் சிறப்புத் தலைவருமான வி. ஏஸ். துரைராஜா, இயக்கத்தின் செயலாளர் ஜேர்மனி வாழ் துரை கணேசலிங்கம், இயக்கத்தின் ஊடகப் பொறுப்பாளர் கனடா வாழ் ஆர். என். லோகேந்திரலிங்கம் ஆகியோர் மேற்கொண்ட முயற்சிகளின் காரணமாக தென்னாபிரிக்காவில் உள்ள தமிழ் ஆசிரியர்களுக்கு மேற்படி பயிற்சி நெறி ஆரம்பிக்கபபட்டது.

மேற்படி பட்டமளிப்பு விழாவிற்கான அனைத்து ஏற்பாடுகளையும் தென்னாபிரிக்கக் கிளையின் தலைவர் மிக்கிச் செட்டி செய்திருந்தார்.

SHARE