
கடைசியாக ஒரு டெஸ்ட் போட்டியில் விளையாடிவிட்டு ஓய்வு பெற்றால் சிறப்பாக இருக்கும் என வெஸ்ட் இண்டீஸ் வீரர் கிறிஸ் கெயில் தெரிவித்துள்ளார்.
வெஸ்ட் இண்டீஸ் அணியின் துவக்க வீரர் கிறிஸ் கெயில். சர்வதேச அரங்கில் சிக்சர் மன்னனாக திகழும் இவர், சமீபத்தில் டி-20 அரங்கில் 10,000 ஓட்டங்களை கடந்த முதல் வீரர் என்ற உலக சாதனை படைத்தார்.
இது தவிர, களத்தில் கொமடிக்கும் சர்ச்சைகளுக்கும் பிரபலமானவர். சிக்சர் மன்னனான இவர் ஒருநாள் போட்டிகளில் மட்டுமில்லாமல், டெஸ்ட் போட்டியிலும் முச்சதம் அடித்துள்ளார்.
இருப்பினும் பல்வேறு காரணங்களுக்காக டெஸ்ட் அணியில் சுமார் 3 ஆண்டுகளுக்கு மேல் இவரால் இடம்பிடிக்க முடியவில்லை. இந்நிலையில் கடைசியாக ஒரு பேர்வல் டெஸ்டில் பங்கேற்றால், நிம்மதியாக ஓய்வு பெற்றுவிடுவேன் என தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து கெயில் கூறுகையில், எல்லா கிரிக்கெட் வீரர்களும் டெஸ்ட் போட்டியிலும் சாதிக்க வேண்டும் என்பதுதான் கனவாக இருக்கும்.
எனக்கும் அதுபோல் தான். அதற்கு டெஸ்டில் இரண்டு முச்சதம் அடித்துள்ளேன். இருந்தாலும், கடைசியாக ஒரு டெஸ்டில் பங்கேற்றால், மகிழ்ச்சியாக விடைபெறலாம் என்றார்.