மகளிருக்கான உலகக்கிண்ணத் தொடரின் இறுதிப் போட்டியில் இங்கிலாந்து அணியின் அன்யா ஸ்ருப்சோல் 6 விக்கெட்டுகள் எடுத்து அசத்தினார்.
இங்கிலாந்தில் நடைபெற்ற மகளிருக்கான இறுதிப்போட்டியில், இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகள் மோதிய ஆட்டத்தில், இங்கிலாந்து அணி 9 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
இப்போட்டியில் இந்திய அணியின் கனவை தகர்த்தவர் அன்யா ஸ்ருப்சோல். இவர் 6 விக்கெட்டுகள் எடுத்து அசத்தினார்.
ஒருகட்டத்தில் 3 விக்கெட் இழப்பிற்கு 191 ஓட்டங்கள் என்று வலுவான நிலையில் இருந்த இந்திய அணி, கடைசியில்8 விக்கெட்டுகளை 28 ஓட்டங்களுக்குள் இழந்தது. கடைசி கட்ட விக்கெட்டுகள் பதற்றத்திலேயே விழுந்தது.
இங்கிலாந்து வீராங்கனை அன்யா ஸ்ருப்சோல், இந்திய அணி வீராங்கனைகளான மந்தனா (0), பூனம் (86), வேதா கிருஷ்ணமூர்த்தி (35), தீப்தி ஷர்மா (14), கோஸ்வாமி (0) ராஜேஸ்வரி கெய்க்வாட் (0) ஆகியோரின் விக்கெட்டுகளை வீழ்த்தி இங்கிலாந்து அணியின் வெற்றிக்கு வித்திட்டார்.