களுவாஞ்சிக்குடியில் வெள்ளத்தில் மூழ்கும் வீடுகள்

406
மட்டக்களப்பு மாவட்டத்தில் மழை பெய்து வருகின்ற நிலையில், மண்முனை தென்னெருவில்பற்று பிரதேச செயலகத்துக்குட்பட்ட களுவாஞ்சிக்குடி கிராமத்தில் 10 வீடுகள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன.

மேற்படி பகுதியில் வெள்ளம் தேங்கிநி ற்பதால், பொதுமக்களின் அன்றாட நடவடிக்கைகள் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் கிராம மக்கள் தெரிவித்தனர்.

மட்டக்களப்பு மாவட்டத்தில் புதன்கிழமை காலை 8.30 மணியிலிருந்து வியாழக்கிழமை காலை 8.30 மணிவரையான கடந்த 24 மணித்தியாலங்களில் 27.2 மில்லிமீற்றர் மழைவீழ்ச்சி பதிவாகியுள்ளதாக மட்டக்களப்பு மாவட்ட வானிலை அதிகாரி கே.சூரியகுமாரன் தெரிவித்தார்.

 

SHARE