காத்தான்குடியை அழிக்கும் ஹிஸ்புல்லாவின் சகாக்கள் பாறுக்கின் வீடு உட்பட 04 வீடுகள் மீது குண்டு வீச்சுத் தாக்குதல்

440

காத்தான்குடியில் சிப்லி பாறுக்கின் காரியாலயத்தை உடைத்தவர்கள் ஆதாரம் வெளியானது இவர்கள் ஹிஸ்புல்லாவின் ஆதரவாளர்கள் என தெரிய வந்தள்ளது

காத்தான்குடியில் சிப்லி பாறுக்கின் வீடு உட்பட 04 வீடுகள் மீது குண்டு வீச்சுத் தாக்குதல்
எம்.எஸ்.எம். நூர்தீன்

காத்தான்குடியில் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் சிப்லி பாறூக்கின் வீடு உட்பட நான்கு பேரின் வீடுகளுக்கு இன்று சனிக்கிழமை (03) அதிகாலை கைக்குண்டு வீச்சு தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக, காத்தான்குடி பொலிஸார் தெரிவித்தனர்.

பொது எதிரணியின் வேட்பாளர் மைத்திரிபால சேறிசேனாவை ஆதரித்து வரும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின் கிழக்கு மாகாண சபை உறுப்பினரான, பொறியியலாளர் சிப்லி பாறூகின் வீட்டின் மீதும் அவரது ஆதரவாளரான புதிய காத்தான்குடி 02ஆம் குறுக்குத்தெருவிலுள்ள எம்.ஐ.எம்.முஜீப் என்பவரின் வீட்டின் மீதும் காத்தான்குடி 06ஆம் குறிச்சி தாறுஸ்ஸலாம் வீதியிலுள்ள ஏ.எல்.இஸ்ஹாக் என்பவரின் வீட்டின் மீதும் காத்தான்குடி அல் அமீன் வீதியில்அமைந்துள்ள எம். பஷீர் என்வரின் வீட்டின் மீதும்இக் கைக்குண்டுகள் வீசப்பட்டுள்ளன.
இதன் காரணமாக வீட்டின் முன் இருந்த கதிரைகள் சேதமடைந்துள்ளன. இது தொடர்பாக காத்தான்குடி பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருவதாக தெரிவித்தனர்.SEPALE

 கிழக்கு மாகாண சபை உறுப்பினர் சிப்லி உட்பட 4 பேரின் வீட்டில் கைக்குண்டு தாக்குதல்

காத்தான்குடியிலுள்ள, கிழக்கு மாகாண சபை உறுப்பினரான சிப்லி பாறூக் உள்ளிட்ட நான்கு பேரின் வீடுகள் மீது கைக்குண்டு தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இன்று அதிகாலை இடம்பெற்ற இந்த சம்பவத்தில், வீட்டு முன் பகுதியில் இருந்த கதிரைகள் உட்பட சில பொருட்களுக்கு சேதம் ஏற்பட்டுள்ளன.

பொது எதிரணியின் வேட்பாளர் மைத்திரிபால சேறிசேனாவை ஆதரித்து வரும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின் கிழக்கு மாகாண சபை உறுப்பினரான, பொறியியலாளர் சிப்லி பாறூகின் வீட்டின் மீதும் அவரது ஆதரவாளரான புதிய காத்தான்குடி 02ஆம் குறுக்குத்தெருவிலுள்ள எம்.ஐ.எம்.முஜீப் என்பவரின் வீட்டின் மீதும் காத்தான்குடி 06ஆம் குறிச்சி தாறுஸ்ஸலாம் வீதியிலுள்ள ஏ.எல்.இஸ்ஹாக் மற்றும் காத்தான்குடி அல் அமீன் வீதியில் அமைந்துள்ள எம். பஷீர் ஆகியோரது வீட்டின் மீது கைக்குண்டுகள் வீசப்பட்டுள்ளன.

இது தொடர்பாக காத்தான்குடி பொலிசார் விசாரணைகளை நடாத்தி வருவதாக தெரிவித்துள்ளனர்.

இதேவேளை காத்தான்குடி பொலிஸ் பிரிவில் இரண்டு கட்சி அலுவலகங்கள் உடைக்கப்பட்டு அங்கிருந்த பொருட்கள் மற்றும் கட்டவுட்களும் சேதப்படுத்தப்பட்டுள்ளன.

காத்தான்குடி பிரதான வீதியிலுள்ள பொது வேட்பாளர் மைத்திரிபால சிறிசேனவின் தேர்தல் பிரச்சார அலுவலகம் நேற்று நள்ளிரவு உடைக்கப்பட்டு அங்கிருந்த கதிரைகள் மற்றும் இரண்டு மோட்டார் சைக்கிள்கள் மற்றும் கட்டவுட்களும் சேதப்படுத்தப்பட்டுள்ளன.

அதேபோன்று காத்தான்குடி பொலிஸ் பிரிவிலுள்ள பாலமுனை பிரதேசத்தில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் தேர்தல் அலுவலகமொன்று தாக்கப்பட்டுள்ளது.

இச்சம்பவம் நேற்று நள்ளிரவு இடம் பெற்றுள்ளது. பாலமுனை வீதியிலுள்ள இவ்வலுவலகம் உடைக்கப்பட்டு அங்கிருந்த பொருட்களும், ஜனாதிபதியின் கட்டவுட்களும் சேதப்படுத்தப்பட்டுள்ளன.

இந்த சம்பவங்கள் தொடர்பாக காத்தான்குடி பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி ஆர்.வெதகெதர தலைமையிலான பொலிஸ் குழு விசாரணைகளில் ஈடுபட்டு வருவதாக காத்தான்குடி பொலிசார் தெரிவித்தனர்.bomp_chairbomp_chair-01

SHARE