கிளிநொச்சி அறிவியல் நகர் பகுதியில் ரயில் கடவையைக் கடக்க முற்பட்ட கார் ஒன்றை ரயில் மோதியதில் அதில் பயணித்த நால்வர் உயிரிழந்தனர். மேலும் இருவர் படுகாயமடைந்து ஆபத்தான நிலையில் கிளிநொச்சி பொது வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளனர். இந்த விபத்து இன்று திங்கட்கிழமை 3 மணிக்கு இடம்பெற்றுள்ளது. தென்பகுதியைச் சேர்ந்தவர்களே விபத்தில் சிக்கினர்என்று தெரியவருகிறது.