கிழக்குமாகாண பாராளுமன்ற உறுப்பினர் பா.அரியநேந்திரன் அவர்களின் புதுவருட வாழ்த்துச்செய்தி

361

மலர்ந்திருக்கும் இப்புதிய ஆண்டு தமிழ் மக்களது அபிலாசைகளை நிறைவேற்றும் ஆண்டாக மாறவேண்டும். கடந்த ஆண்டின் கசப்பான உணர்வுகள் எம்மைவிட்டு அகலாத நிலையிலும், யுத்த சூழல் இன்றி சமாதானமான முறையில் தொடர்ந்து பயணிக்கவேண்டும் என்று இந்த ஆண்டில் இறைவனை பிரார்த்திப்பதோடு, புதி அரசாங்கம் இவ்வாண்டிலாவது தமிழ்மக்களுக்கு வழங்கிய வாக்குறுதிகளை செவ்வனவே மேற்கொள்வதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். இந்த புதிய ஆண்டில் சாந்தியும், சமாதானமும், சந்தோசமும் பெற்று அனைவரும் ஒற்றுமையாக வாழ இறைவனை பிரார்த்திக்கின்றேன்.

1

SHARE