பிரபல போதைப் பொருள் வியாபாரியான வெலே சுதாவின் வாக்குமூலத்தின் அடிப்படைடையில், துமிந்த சில்வாவை கைது செய்து தடுப்புக் காவலில் வைத்து விசாரணை நடத்த குற்றப் புலனாய்வுப் பிரிவு பொலிஸார் தயாராகினர்.
அப்படி செய்ய வேண்டாம் என அரசாங்கத்தின் உயர்மட்டத்தில் இருந்து பொலிஸ் மா அதிபருக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இதன் காரணமாக துமிந்த சில்வாவிடம் விசாரணை நடத்தும் போது அவருக்கு உச்சளவிலான வசதிகளை ஏற்படுத்திக்கொடுக்கும் நிலைமை புலனாய்வுப் பிரிவு பொலிஸாருக்கு ஏற்பட்டுள்ளது.
புதிய அரசாங்கத்தின் பெரும்பாலான பிரதிநிதிகள் ராஜபக்ச அரசாங்கத்துடன் பல்வேறு தொடர்புகளை கொண்டிருந்தவர்கள் என்பதுடன் பல்வேறு ஒப்பந்தங்களை மேற்கொண்டு செயற்பட்டு வந்தவர்களாவர்.
இவர்கள் ஆட்சிக்கு வந்த பின்னர் தமக்கு உதவியவர்களை பாதுகாக்க வேண்டிய நிலைமை ஏற்பட்டுள்ளதாக புலனாய்வுப் பிரிவு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.