. இவர்கள் குற்றம் ஏதும் நிரூபிக்கப்படாத விசாரணைக் கைதிகள் மட்டுமே. அதிலும் ஒருவரின் வழக்கு விரைவில் முடிவுக்கு வந்து விடுவிக்கப்படும் சூழலில் இந்த படுகொலையை போலீஸ் நிகழ்த்தியுள்ளது. வேனின் கம்பிகளோடு சேர்த்து விலங்கிடப்பட்டிருக்கும் இந்த இளைஞர்கள் போலீசை தாக்கி துப்பாக்கியை பறிக்க முயற்சி செய்தார்களாம் அதனால் போலீஸ் திருப்பி சுட்டார்களாம்.
இதற்கு முந்தைய வாரம் சிமி இயக்கத்தை சேர்ந்த 2 பேர் போலீசால் படுகொலை செய்யப்பட்டார்கள். சமீபத்தில் மொத்தம் 27 பேர் அரசால் கொல்லப்பட்டுள்ளனர். மதம், இன சாதி பாகுபாடின்றி அரசின் இந்த படுகொலைகளை கண்டிப்போம்.