கொழும்பு – மட்டக்குளி பகுதியில் வீதி மறிக்கப்பட்டு போராட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகிறது.
தமக்கு எரிவாயு பெற்றுத் தருமாறு கோரியே இந்த போராட்டத்தை மக்கள் ஆரம்பித்துள்ளனர்.
எரிவாயு பெற்றக் கொடுக்கப்படுமாக இருந்தால் வீதியிலிருந்து விலகி போராட்டத்தை முடிவிற்கு கொண்டு வருவதாகவும் குறிப்பிட்டுள்ளனர்.
இந்த நிலையில் அப்பகுதியில் பொலிஸாரும் குவிக்கப்பட்டுள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.