ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடும் பொது எதிரணி வேட்பாளர் மைத்திரிபால சிறிசேனவை ஆதரித்து தமிழ் தேசியக் கூட்டமைப்பின் ஜனாதிபதித் தேர்தல் பிரச்சாரப் பணிகள் மட்டக்களப்பில்இன்று வியாழக்கிழமை(01) ஆரம்பித்து வைக்கப்பட்டன.
இதில் பாராளுமன்ற உறு;பிபனரான பா.அரியநேத்திரன், மாகாண சபை உறுப்பினர்களான கே.துரைராஜசிங்கம், கோ.கருணாகரம், பிரசன்னா, வெள்ளிமலை, நடராசா மற்றும் தமிழரசுக்கட்சியின் முக்கியஸ்தர்கள் ஆதரவாளர்களும் கலந்து கொண்டிருந்தனர்.
மட்டக்களப்பிலுள்ள தமிழரசுக்கட்சியின் அலுவலகத்தில் இருந்து புறப்பட்ட இக்குழுவினர் நகரின் பல்வேறு பகுதிகளிலும் துண்டுப்பிரசுரங்களை விநியோகத்தனர்.