சஜித் பிரதி தலைவரானால், ரவி பதவி விலகுவார்!-

380
ஐக்கிய தேசியக் கட்சியின் பிரதித் தலைவராக சஜித் பிரேமதாஸ நியமிக்கப்பட்டால், கொழும்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ரவி கருணாநாயக்க கட்சியின் பதவிகளில் இருந்து விலகுவார் என்று கொழும்பின் அரசியலில் ஊகங்கள் வெளியிடப்பட்டுள்ளன.

கொழும்பின் பெரும்பாலான ஊடகங்களின் தகவல்படி சஜித் பிரேமதாஸவை பிரதித் தலைவராக நியமிக்கவேண்டும் என்ற கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளது.

இதற்கு ரவி கருணாநாயக்க, மங்கள சமரவீர மற்றும் விஜயதாஸ ராஜபக்ச ஆகியோர் எதிர்ப்பை வெளியிட்டு வருகின்றனர்.

எனினும் ரணில் விக்கிரமசிங்க, கட்சியின் முன்னேற்றத்தை கருத்திற்கொண்டு சஜித்தை பிரதித் தலைவராக்குவதற்கு முனைப்புக்காட்டி வருகிறார்.

இந்தநிலையில் ரவி கருணாநாயக்கவை காட்டிலும் சஜித் பிரேமதாஸவுக்கு பொதுமக்கள் மத்தியிலும் வரவேற்பு உள்ளதாக ஐக்கிய தேசியக் கட்சி தரப்புக்கள் தெரிவிக்கின்றன.

 

SHARE