புதிய அரசாங்கம் தமிழர்கள் சார்ந்த பிரச்சினைகள் தொடர்பாக ஆராய முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க தலைமையில், தேசியக் நல்லிணக்க குழுவொன்றை நியமித்துள்ளது.
இந்த குழுவிற்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்று அமெரிக்க இராஜாங்க செயலாளர் ஜோன் கெரி தம்மிடம் தெரிவித்ததாக, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்தார். |