சர்வதேச விசாரணையை தவிர ஐ.நாவின் மற்ற அனைத்து தீர்மானங்களையும் நிறைவேற்ற தயார்: ராஜபட்ச

483

சர்வதேச விசாரணையை தவிர ஐ,நா.சபையின் மற்ற தீர்மானங்களை நிறைவேற்ற தயார் என்று  இலங்கை அதிபார் ராஜபட்ச அறிவித்துள்ளார்.

இலங்கையில் கடந்த 2009 ஆம் ஆண்டு நடைபெற்ற இறுதிகட்ட யுத்தத்தில் ஏராளமான அப்பாவி மக்கள் கொல்லப்பட்டனர். இந்த மனித உரிமை மீறல்  குற்றச்சாட்டு தொடர்பாக ஐ.நா. மனித உரிமகள் ஆணையம் சர்வதேச விசாணைக்கு பரிந்துரைத்தது. இந்நிலையில் ஜப்பான் வெளியுறவு துணை அமைச்சர் செய்கி கிஹாராவுடன் இலங்கை அதிபர் ராஜபட்ச சந்தித்து பேசினார்.

அப்போது ஐநாவின் சர்வதேச விசாணை தீர்மானத்தை தவிர மற்ற தீர்மானங்கள் அனைத்தையும் நிறைவேற்ற இலங்கை தயாரா உள்ளதாக தெரிவித்தார். மேலும் இந்த உண்மையை உலசின் பிற நாடுகளுக்கு நீங்கள் எடுத்துக்கூறுங்கள் என்று ராஜபட்ச தெரிவித்தார்.

SHARE