
சிரியா நாட்டில் ராணுவத்துக்கும், ஐ.எஸ். தீவிரவாதிகளுக்கும் தொடர்ந்து சண்டை நடந்து வருகிறது.கடந்த 2 நாட்களில், வடக்கு மற்றும் தெற்கு பகுதிகளில் நடந்த போரில் ராணுவத்தினர் 100 பேரும், ஐ.எஸ். தீவிரவாதிகள் 80 பேரும் கொல்லப்பட்டனர்.மேலும் 120 ராணுவ வீரர்களை, தீவிரவாதிகள் பிடித்து வைத்ததாகவும் தகவல் வெளியாகி உள்ளது.சிரியாவில் கடந்த 2 வருடங்களில் நடந்த உள்நாட்டுப் போரில் சுமார் 2 லட்சம் பேர் பலியாகி விட்டதாக ஐக்கிய நாடுகள் சபை புள்ளிவிவரம் வெளியிட்டுள்ளது.