கிளிநொச்சியில் இன்று நடைபெறயிருக்கும் மஹிந்தவின் தேர்தல் பிரச்சாரக்கூட்டத்துக்காக பெருமளவான அரச உத்தியோகத்தர்கள் களத்தில் இறக்கப்பட்டுள்ளார்கள்.
குறிப்பாக சுதந்திரக்கட்சியின் கிளிநொச்சி மாவட்ட அமைப்பாளர் கீதாஞ்சலி தலைமையில் வவுனியாவிலிருந்தும் பெருமளவானவானோர் அழைத்து வரப்பட்டுள்ளனர்.
சமுர்த்தி உத்தியோகத்தர்கள் மற்றும் ஏனைய திணைக்களங்களைச் சார்ந்த உத்தியோகத்தர்களும் மகிந்தவுக்காக பிரச்சார நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
மஹிந்தவின் வருகையைத் தொடர்ந்து கிளிநொச்சி நகர் எங்கும் பொலிசாரும் இராணுவத்தினரும் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
இந்த நடவடிக்கையானது தேர்தல் சட்டங்களை மீறும் செயலாகும்.
கிளிநொச்சி ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவின் தேர்தல் பிரச்சார கூட்டம்