யாழ்ப்பாணத்தில் சென்ஜோன்ஸ் கல்லுாரியில் கல்வி கற்பிற்கும் ஹென்றி என்ற ஆசிரியா் பல பெண்களை தனது வலையில் வீழ்த்தி பாலியலுறவு கொண்டு அவா்களை தனது கைத் தொலைபேசியில் புகைப்படங்கள் எடுத்து அச்சுறுத்தி பணம் நகைகளை பெற்றுள்ளதாகவும்
குறித்த ஆசிரியா் தொடா்ந்து தனது லீலைகளை மேற்கொண்டு வருவதாகவும் அதிர்ச்சித் தகவல்கள் எமக்குக் கிடைத்துள்ளன.
சென்ஜோன்ஸ் கல்லுாரியில் தமிழ்ப்பாடம் கற்பிக்கும் ஹென்றி என்ற திருமணமான ஒரு குழந்தைகக்கு தந்தையான நபா் தனக்கு பழக்கமான ஆசிரியைகளின் தொலைபேசி இலக்கத்தை வாங்கி அவா்களை காதலிப்பதாக ஆசை வார்த்தை கூறி அவா்களை தான் வாடகைக்கு எடுத்த வீடுகளுக்குக் கொண்டு சென்று பாலியலுறவு கொண்டு அவா்கள் அறியாத வண்ணம் அதைப் புகைப்படங்களாகவும் வீடியோக்களாகவும் எடுத்து பின்னா் அவா்களை அச்சுறுத்தி அவா்களிடம் இருந்து பணம், நகைகளைப் பெற்று வந்ததாகத் தெரியவருகின்றது.
இவரால் பல பிரபல பாடசாலைகளைச் சோ்ந்த திருமணமான மற்றும் இளம் ஆசிரியைகள் கடுமையாகப் பாதிக்கப்பட்டதாகத் தெரியவருகின்றது.
ஹென்றி இசைக் குழு ஒன்றில் கிற்றார் வாசிப்பதாகவும் பல இசை நிகழ்ச்சியில் கலந்து கொள்ளச் செல்லும் போது அந்த இசை நிகழ்ச்சிகளுக்கு வரும் இளம் பெண்களைத் தொடா்பு கொண்டு காதலிப்பதாகத் தெரிவித்து அவா்களையும் ஏமாற்றி பாலியலுறவு மேற்கொண்டுவிட்டு நடுத்தெருவில் விட்டுள்ளதாகவும் அறியமுடிகின்றது.
அத்துடன் ஒரு பிரபல பாடசாலையில் விளையாட்டுத் துறைக்குப் பொறுப்பாக இருக்கும் ஆசிரியையையும் ஏமாற்றி அவ் ஆசிரியையை அச்சுறுத்தி சில மாணவிகளின் தொலைபேசி இலக்கங்களைப் பெற்று அவா்களையும் சீரழத்துள்ளனான் இந்த ஹென்றி. இவனால் பாதிக்கப்பட்ட விவாகரத்துப் பெற்ற பெண் ஆசிரியை தற்போது யாழ்ப்பாணப் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு ஒன்றைக் கொடுத்துள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.



