ஜக்கியதேசிய கட்சிக்கு பதினைந்து இலட்சம் அங்கத்தவர்களை உள்வாங்கும் திட்டத்தில் வவுனியாவில் ஜக்கியதேசிய கட்சியின் வன்னி மாவட்ட அமைப்பாளர் குனைஸ் பாறுக் தலமையில்

388

 

 

ஜக்கியதேசிய கட்சிக்கு பதினைந்து இலட்சம் அங்கத்தவர்களை உள்வாங்கும்

திட்டத்தில் வவுனியாவில் ஜக்கியதேசிய கட்சியின் வன்னி மாவட்ட

அமைப்பாளர் குனைஸ் பாறுக் தலமையில் ஜக்கியதேசிய கட்சிக்கு

அங்கத்தவர்களை இணைக்கும் நிகழ்வு இன்று சனிக்கிழமை 28-03-2015

வவுனியா நகரத்தில் ஆரம்பித்து வைக்கப்பட்டது.

unnamed (6) unnamed (7) unnamed (8)

இந்நிகழ்வில் வவுனியா மாவட்ட அமைப்பாளர் கருணதாச மற்றும்

ஜக்கியதேசிய கட்சியின் இனைஞ்ஞர் அணியின் இணைப்பாளர் சஜித்,

மற்றும் ஜக்கியதேசிய கட்சியின் உறுப்பினர்கள்

கலந்துகொண்டிருந்தனர்.

இந்நிகழ்வில் ஜக்கியதேசிய கட்சியின் வன்னி மாவட்ட அமைப்பாளர் குனைஸ்

பாறுக் கருத்து தெரிவிக்கையில்0000

தற்போது இந்த நாட்டில் நல்லாட்சி நிலவிக்கொண்டிருக்கிறது

இந்தவேளையில் ஆட்சியில் முக்கிய பங்காளி கட்சியாக ஜக்கியதேசிய கட்சி

காணப்படுகின்றது என குறிப்பிட்ட அவர் ஜக்கியதேசிய கட்சியின்

தலைவரும் பிரதமர் ரணில் விக்கிரம சிங்க அவர்களின் தலமையில்

பதினைந்து இலட்சம் பேரை கட்சியில் உள்வாங்கும் திட்டத்தின்

அடிப்படையில் வன்னி மாவட்டத்தின் அங்கத்தவர்களை சேர்க்கின்ற முதலாவது

தினமான இன்று இவ்வேலைத்திட்டத்தை வவுனியாவிலிருந்து

ஆரம்பித்திருப்பதாகத் தெரிவித்தார்.

SHARE