ஜனநாதன், வசந்தபாலன், பாலா என வரிசையாக மிகப்பெரிய இயக்குநர்களின் படங்களில் தன்ஷிகா நடித்திருந்தாலும் அவரால் தமிழில் முன்னனி நாயகியாக வரமுடியாமலும், போதிய பட வாய்ப்புகளும் இல்லாமலே இருந்தது. ஆனால் தற்போது அடுத்த மாதம் தன்ஷிகா நடித்துள்ள விழித்திரு படம் வெளிவர இருக்கிறது. இது தவிர காத்தாடி, திறந்திடு தீசே, மால் ஆகிய படங்களில் நடித்து வருகிறார். அதுமட்டுமின்றி இயக்குநர் சமுத்திர கனி இயக்கத்தில் கிட்ணா படத்தில் நடித்து வருகிறார். இந்த 5 படங்களில் முதல் நான்கு படங்களின் மூலம் தான் கோலிவுட்டில் முன்னனி நாயகியாக வலம் வர முடியுமென்ன்றும், கிட்ணா படம் கண்டிப்பாக தனக்கு பல விருதுகளை வாங்கிகொடுக்கும் என்ற நம்பிக்கையில் இருக்கிறார் தன்ஷிகா.