தமிழ் மக்கள் நினைத்த மாதிரியெல்லாம் செயற்பட முடியாது! மஹிந்த-இவர் பெரிய கிஸ்ன பரமாத்மா சொல்லுற கீதைய கேட்கனுமாம்

433

 

தமிழர்கள் நினைத்தது எல்லாம் நடத்திய காலம் தற்போது இல்லை, யுத்தத்துடன் அந்த நிலைமையை மாற்றி விட்டோம் என்று ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

நேற்று நடந்த தேர்தல் பிரசாரக் கூட்டம் ஒன்றில் உரையாற்றுகையில் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

தமிழ் மக்களை மைத்திரியிடம் அடகு வைத்துள்ளது தமிழ் தலைமைகள், தமிழ் மக்களுக்கு நான் எப்போதும் நண்பன், இந்தியா எனது நேச நாடு அவர்கள் என்னை நம்புகின்றனர்.

8ம் திகதிக்கு பின் நான் தான் ஜனாதிபதி, எவரும் பயப்பட தேவை இல்லை.

எனது பின் வாசலுக்கு தமிழ் தேசியக் கூட்டமைப்பு வரத்தான் வேண்டும்.

ஆகவே நான் சொல்வதைத்தான் செய்வேன், செய்வதைத்தான் சொல்லுவேன் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

அதேவேளை, வடக்கு மாகாணத்தில் இந்தமுறை தனக்கு 35 வீதமான வாக்குகள் கிடைக்கும் என்று எதிர்பார்த்திருப்பதாக ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

தந்தி தொலைக்காட்சிக்கு அளித்துள்ள செவ்வி ஒன்றிலேயே இந்த எதிர்பார்ப்பை வெளிப்படுத்தியிருக்கிறார்.

வடக்கு மாகாணசபைத் தேர்தலில் 20 வீத வாக்குகளைக் கூட ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியால் பெற முடியவில்லையே என்று, எழுப்பிய கேள்விக்குப் பதிலளித்த மகிந்த ராஜபக்ச, தாம் இம்முறை வடக்கில் 30 தொடக்கம் 35 வீதமான வாக்குகள் கிடைக்கும் என்று எதிர்பார்ப்பதாகத் தெரிவித்துள்ளார்.

மேலும், வடக்கு மாகாணசபைத் தேர்தலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு மூன்றில் இரண்டு பெரும்பான்மையைப் பெறும் என்று தனக்கு முன்னரே தெரியும் என்றும் அவர் குறிப்பிட்டார்.

எனினும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினால் நிர்வாகம் நடத்த முடியாது என்பதை, மக்களுக்கு புரிய வைப்பதற்காகவே தாம் அங்கு தேர்தலை நடத்தியதாகவும் அவர் தெரிவித்திருக்கிறார்.

– See more at: http://www.tamilwin.net/show-RUmszCQVKbnp6.html#sthash.F1tCBBRW.dpuf

SHARE