தயாரிப்பாளர்களை கோபத்தில் ஆழ்த்திய காஜல்

316

தமிழ், தெலுங்கு, ஹிந்தி என பிஸியாக நடித்து வருகிறார் காஜல் அகர்வால். ஆனால், தற்போது இவரின் மீது அனைத்து தயாரிப்பாளர்களும் கோபத்தில் இருக்கிறார்களாம்.

ஏனெனில், படப்பிடிப்பில் காஜலை சுற்றி சுமார் 6 பேர் எப்போதும் இருக்கிறார்கள். இவர்கள் யார் என்று விசாரித்தால், மேக்கப் ஆர்டிஸ்ட், ஆடை வடிவமைப்பாளர், டச்சப் பாய் என கூறுகிறார்கள்.

இதனால், இவருடைய சம்பளம் தாண்டி இதற்காகவே நிறைய செலவு ஆவதால், தயாரிப்பாளர்கள் காஜல் மீது வெளியில் சொல்ல முடியாத கோபத்தில் இருப்பதாக கோலிவுட்டில் கிசுகிசுக்கப்படுகிறது.

SHARE