திகில் படம் இயக்குகிறார் ஜெய்பாலா 

367



‘சுவடுகள்’ படத்தை இயக்கி நடித்த அமெரிக்கவாழ் தமிழர் ஜெய்பாலா, அடுத்து திகில் படத்தை இயக்குகிறார். இதுகுறித்து அவர் கூறியதாவது:

‘சுவடுகள்’ படத்தில் 12 துறைகளின் பணிகளை கவனித்தேன். அமெரிக்காவில் தமிழர்களுக்கு படத்தை திரையிட்டேன். மீண்டும் படம் இயக்கச் சொல்லி உற்சாகப் படுத்தினார்கள். அமெரிக்காவில் திரைப்பட இயக்கம் கற்றுள்ளதை அடிப்படையாக வைத்து, திகில் படம் இயக்குகிறேன். பேய் மற்றும் அமானுஷ்ய சக்திகள் இல்லாத திகில் படமான இதில், 10 துறைகளை கையாள்கிறேன். பாலா புரொடக்ஷன்ஸ் சார்பில் நானும், நண்பர்களும் தயாரிக்கிறோம். வரும் டிசம்பர் மாதம் படப்பிடிப்பு தொடங்குகிறது

 

SHARE