தினப்புயல் இணையதளம் எமது வாசக வர்த்தக நெங்சங்களுக்கு தனது புத்தாண்டு வாழ்துக்களை
தெரிவித்துக்கொள்கிறது
*மண்டியிடா ஆண்டாக மலரட்டும்*
₹₹₹₹₹₹₹₹₹₹₹₹₹₹₹₹₹₹₹₹₹₹₹₹₹₹₹
மற்றும் ஒரு புத்தாண்டு 2015,,!
மலர்கிறது வரவேற்போம்!
மக்களுக்கு நன்மை தரட்டுமென!
மன்றாடுவோம் ஆனால்!
மகிழ்சியின்னும் எமக்கில்லை!
மண்ணிற்கும் விடிவு இல்லை!
மனநிறைவு கிடைக்கவில்லை!
மறத்தமிழர் வாழ்வுகளில்!
மலைபோன்ற தடைகள் இன்னும்!
மனச்சாட்சி இல்லா ஆட்சி!
மன்னருக்கோ இனவாதம்!
மனப்பான்மை தெரியவில்லை!
மறுமலர்ச்சி புத்தாண்டில் வருவதற்கும்!
மறுபடியும் சுதந்திரம் கிடைப்பதற்கும்!
மரியாதையுடன் வாழ்வதற்கும்!
மண்டியிடா ஆண்டாக மலரட்டும்!
–:அம்பிளாந்துறையூர் அரியம்:-
