தமிழ் சினிமா நட்சத்திரங்களிடையே நடிகர் சங்க தேர்தல் பெரிய பிளவை உண்டாக்கியுள்ளது. சரத்குமார் அணி, விஷால் அணி என இரண்டு அணிகள் மோதவுள்ளது.
இந்நிலையில் தேர்தல் புதன் கிழமை வைப்பதால், நடிகர், நடிகைகளுக்கு பல வேலைகள் இருக்கும், அதனால், அவர்களால் பங்கேற்க இயலாது, மாதத்தின் இரண்டாவது ஞாயிறு அன்று தேர்தலை நடத்த வேண்டும் என விஷால் தரப்பு நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது.
இதை இன்று விசாரித்த நீதிபதி நடிகர் சங்க தேர்தலுக்கு தடை விதிக்க மறுத்துள்ளார். மேலும், இது தொடர்பாக இரண்டு வாரத்தில் பதில் அளிக்க நடிகர் சங்க பொதுச் செயலாளர் ராதாரவிக்கு நோட்டீஸ் அனுப்பப்பட வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது.