
காணாமல் போனவர்களை மீட்டுத்தரக் கோரியும் ஐ.நா நீதியான விசாரணை செய்ய வேண்டும் என்று வலியுறுத்தியும் நல்லூர் ஆலய முன்றலில் கடந்த மூன்று நாள்களாக மேற்கொள்ளப்பட்ட உணவு தவிர்ப்புப் போராட்டம் சாகும் வரையான உண்ணாவிரதப போராட்ட எச்சரிக்கையுடன் இன்று பிற்பகலுடன் முடிவடைந்தது.
அதேவேளை ஐ.நா வின் நீதி வேண்டி முள்ளிவாய்க்காலில் இருந்து ஆரம்பிக்கப்பட்ட நடைபயணமும் உண்ணா விரதிகளுடன் இணைந்து கொண்டது.
இந்த நிகழ்வில் காணாமல் போனோரது உறவுகள் தமக்காக முள்ளிவாய்க்காலிலிருந்து கால்நடையாக சென்று சேர்ந்த இளைஞரணியினரை வரவேற்றிருந்தனர்.
போராட்டத்தை முடித்து வைத்து கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர் சுரேஸ் பிறேமச்சந்திரன், இளைஞரணி செயலாளர் சிவகரன், நீதிக்கும் சமாதானத்திற்குமான நல்லெண்ண அமைப்பினை சேர்ந்த வணபிதா மங்களராஜா உள்ளிட்டோர் உரையாற்றியிருந்தனர்.
இறுதியில் போராட்டகாரர்களிற்கு மென்பானம் வழங்கி போராட்டம் முடிவுக்கு கொண்டுவரப்பட்டு உள்ளது.