நாடாளுமன்ற உறுப்பினர் ஜே.ஸ்ரீரங்கா ஊடகத்துறையை ஏமாற்றிவரும் அரசாங்கத்தின் கைக்கூலி-அமைச்சர் ரிசாத் பதியுதீன்,.ஸ்ரீரங்காவை தாக்கியதாக தகவல்கள்

611

 

mainpic1அலரி மாளிகையில் நேற்று இடம்பெற்ற விருந்துபசாரம் ஒன்றின் போது அமைச்சர் ரிசாத் பதியுதீன்,  நாடாளுமன்ற உறுப்பினர் ஜே.ஸ்ரீரங்காவை தாக்கியதாக தகவல்கள் வெளியாகியுள்ளன

ஸ்ரீரங்கா, தாம் தொகுத்தளிக்கும் தொலைக்காட்சி அரசியல் நிகழ்வில் அமைச்சர் ரிசாத் பதியுதீனை விமர்ச்சித்த காரணத்தினாலேயே இந்த தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

ஜனாதிபதி தேர்தல் தொடர்பி;ல் ரிசாத் பதியுதீன் எடுத்த முடிவை தமது நிகழ்ச்சியில் ரங்கா விமர்ச்சித்திருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

பணத்துக்காகவே அமைச்சர் இந்த முடிவை எடுத்திருக்கலாம் என்று ரங்கா குறித்த நிகழ்ச்சியில் கூறியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தநிலையில் நேற்றைய தாக்குதல் சம்பவத்தை இரண்டு நாடாளுமன்ற உறுப்பினர்களும் இன்னும் நிராகரிக்கவில்லை.

துணை இராணுவக் குழுக்களின் செயற்பாடுகளுக்கு பாதுகாப்புச் செயலாளர் அங்கீகாரம் வழங்கியதாக பாராளுமன்ற உறுப்பினர் ஜே.ஸ்ரீரங்கா தெரிவித்ததாக விக்கிலீக்ஸ் தகவல் வெளியிட்டுள்ளது.

அமெரிக்கத் தூதரக அதிகாரகளினால், அந்நாட்டு ராஜாங்கத்திணைக்கத்திற்கு அனுப்பிவைக்கப்பட்ட குறிப்பில் இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது.

2007ம் ஆண்டு மே மாதம் 18ம் திகதி அமெரிக்கத் தூதுவர் ரொபர்ட் ஓபிளக்கினால் இந்தத் தகவல் அனுப்பிவைக்கப்பட்டுள்ளது.

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ குடும்பத்தினருடன் மிக நெருக்கமான தொடர்புகளைப் பேணி வரும் ஜே.ஸ்ரீரங்காவிடமிருந்து பெற்றுக்கொள்ளப்பட்ட தரவுகள் மிகவும் இரகசியமானவை என பிளக் குறிப்பிட்டுள்ளார்.

இலங்கையில் ஆட்சிசெய்த அரசாங்கங்கள் துணை இராணுவக் குழுக்களுக்கு பணம் வழங்கிவந்ததாக பிளக் தெரிவித்துள்ளார்.

குற்றச்செயல்களில் ஈடுபடுவதனை தடுப்பதற்காக முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்கவின் ஆட்சிக்காலத்தில் துணை இராணுவக் குழுக்களுக்குநிதி உதவிகள் வழங்கப்பட்டதாக ஸ்ரீரங்கா குறிப்பிட்டுள்ளார்.

இந்தத் தகவலை சில வெளிநாட்டு ராஜதந்திரிகளும் உறுதிப்படுத்தியதாக பிளக் அனுப்பி வைத்த குறிப்பில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

எவ்வாறெனினும், தற்போதைய அரசாங்கம் துணை இராணுவக்குழுக்களுக்கு நிதி உதவிகளை வழங்கும் நடவடிக்கைகளை நிறுத்திக்கொண்டதாக ஸ்ரீரங்கா குறிப்பிட்டுள்ளார்.

இதற்கு பதிலாக ஈ.பி.டி.பி. மற்றும் கருணா தரப்பு போன்றோர் தமிழ்வர்த்தகர்களிடம் கப்பம் பெற்றுக்கொள்ள பாதுகாப்புச் செலயலாளர் அங்கீகாரம் வழங்கியிருந்ததாகக் குறிப்பிட்டுள்ளார்.

இதன் காரணமாகவே நாட்டின் சட்டம் ஒழுங்கு வெகுவாக பாதித்துள்ளது என தெரிவித்துள்ளார்.

கருணா தரப்பும், டக்ளஸ் தரப்பும் தமிழ் சமூகம் மீது அடக்குமுறைகளைப் பிரயோகித்துவந்ததாக பிளக் தமது குறிப்பில் மேலும் தெரிவித்துள்ளதாக விக்கிலீக்ஸ் தகவல் வெளியிட்டுள்ளது.

  • Vanni Tholan · University of Peradeniya

    இந்த ரங்கா பச்சோந்தி என்பதை இப்போதாவது விளங்குகின்றதா?கடந்த மின்னலில் சகோ.ஆசாத் சாலியினை பொய்க்காரண் என்று கூறினான்.இரு முஸ்லிம்களை அழைத்து அவமானப்படுத்துகின்ற வேளையினை செய்கின்றான்.மின்னல் என்ற போர்வையில் முழு அனவாதத்தை கக்குகின்றான்..முஸ்லிம்களையும்,முஸ்லிம் தலைமையினையும் அழிக்க புறப்பட்ட அநியாயக் காரண்.இரு வாரங்களுக்கு முன்னர் மின்னலில் சகோதரர் ரவூப் ஹக்கீமை அவமானப்படுத்தினான்.அப்போதுஅங்கிருந்த அஸ்லம் எம்.பி.கொஞ்சம் இவனுடன் முரண்பட்டார்……..அடி உதவுவது போல் அண்ணன் தம்பி உதவமாட்டான்…..சரியான அடி சபாஷ்…….சார்……
    • MT Buhary Mohammed Harrish ·  · Kinniya urban council at Opposition Leader

      ரங்கா பச்சோந்தி போல் நிறம் மாறுவதாக சொன்னீர்கள் ஆனால் முகம் தெரிய கருத்து தெரிவிக்க நீங்களே முன்வரவில்லை ரங்கா போன்று முகம் காட்டும் நடுநிலைவாதிகளுக்கு உலகம் ஒருநாளும் இடம் கொடுக்காது
  • MT Buhary Mohammed Harrish ·  · Kinniya urban council atOpposition Leader

    ரங்கா மட்டும் இல்லை என்றால் வாய் அடைத்த மடையர்களாக வாழுவீர்கள் பாராளுமன்றத்தில் மற்றும் ஆடம்பர கோட்டலில் அமைச்சுக்கள் நடத்தும் நாடகங்களை உங்களுக்கு சொல்வது யார் ????? முஸ்லிம் முட்டாள்களே குர்ஆன் கூறியே சிந்திக்காத நீங்கள் இப்போதா சிந்திக்க போகிறீர்கள் ரங்கா போன்றவர் முஸ்லிம் இனத்தில் பிறக்கவில்லையே என்று கவலைப்பட்டு அவரை இஸ்லாத்தின் பக்கம் திருப்ப அல்லாஹ்விடம் துஆ செய்யுங்கள்
    • Irsath Jinnah · Works at Midmac Contracting Company WLL

      My personal view. Ranga is not genuine person.he ie gunning
    • MT Buhary Mohammed Harrish ·  · Kinniya urban council at Opposition Leader

      Irsath Jinnah ரங்கா மட்டும் இல்லை என்றால் ரிசாட் என்பவர் யார் என்றே இலங்கைக்கு தெரிந்திருக்காது ! சீண்டி விடுபவர் என்று சொல்கிறோம் அதிலே மக்களுக்கு நலன் இருக்கிறாதா இல்லையா என்பதே நமது தேவை அரசியலில் இவர்கள் முஸ்லிம்களின் நலனுக்காக புடுங்கிய ஆணிகள் இன்று கிழக்கு மாகாண அரசியலிலும் சேவயற்று கிடக்கிறது நமக்கு தேவை பொது நலம் மட்டுமே
  • Kachi Subatha ·  Top Commenter

    அ.இ.ம.கா. கையளித்த 20 அம்சக் கோரிக்கைக்கு தீர்வு கிடைக்க முன்னரே, அமீர்அலி எம்.பி.யாகி விட்டார்.

    19ம் திகதி காத்தான்குடிக்கு வரும் மஹிந்த ராஜபக்ஷவை வரவேற்று அவருக்கு ஆதரவாக தேர்தல் பிரச்சாரக்கூட்டம் நடாத்த அ.இ.ம.கா. உப தலைவர் பிரதியமைச்சர் ஹிஸ்புல்லாஹ் தயாராகி வருகிறார்.

    இங்கே அலரி மாளிகைக்குள் நின்று கட்சியின் தலைவர் ரஜனிகாந்த் ஆட்டம் ஆடுகிறார்.

    என்னையா இது? எல்லாம் சுத்தமான பம்மாத்தாக இருக்கிறதே..! மக்களை அவ்வளவு மடையர்களாகத்தான் இன்னமும் இந்த அ.இ.ம.கா. கட்சியினர் கருதிக்கொண்டிருக்கிறார்களா?

    • Ashraf Fahad · Works at Saudi Arabia

      மக்களை மடையர்கள் என்று கருதிக்கொண்டிருக்கிறார்களா
  • Mohamed Naleem · Good at Driving

    பசுந்தோல் போற்றிய புலி ரங்கா
  • Nagoorkani Salahudeen · Mahatma Gandhi University

    Ranka oru ulavali muslim amacharkal kavanam
  • Tangarasa Sajahan · Works at PepsiCo

    ராங்கா மூட்ட பூச்சி
  • Mohamed Haydar Ali · Caregiver at Kuwait City

    இந்தரங்ஙா ஒரு சமூஹ துரொஹி இவனுக்கு கலிமாசெல்லி கலுத்த அருக்கனும்
  • Sajith Alm · Riyadh, Saudi Arabia

    முஸ்லிம் சமூகத்தின் பிரச்சினைகள் தொடர்பில் ஜனாதிபதியுடன் பேசுவதற்கு தலைவர் அழைத்தும் அலறி மாளிக்கைக்கு செல்லாத இந்த எம்.பி. ஊர் உறங்கியிருந்த வேளை நடுநிசியில் அதுவும் ரங்காவுடன் அங்கு சென்று விருந்துண்டு குதூகளித்ததன் மர்மம் என்ன?

    இந்த குதூகலம் “டீல்” பேசி முடிந்த பின்னரா இடம்பெற்றது என்கின்ற பலமான சந்தேகம் ஏற்படுகிறது.

    சொந்த ஊரில் ஜனாதிபதியை திட்டித் தீர்த்து- மக்களுக்கு தன்னை நல்ல பிள்ளையாக காட்டிக் கொண்டு கட்சியின் ஏனைய உறுப்பினர்களை தூற்றி வருகின்ற இந்த எம்.பி.- ரங்காவின் பாணியில் அவருடன் சென்று டீல் அடித்துள்ளார்.

    ரங்கா மின்னல் நிகழ்ச்சியில் மஹிந்தவை அதிகா பட்சம் விமர்சிப்பவர். மஹிந்தவை ஆதரிக்கும் தமிழ், முஸ்லிம் அரசியல் தலைமைகளை சமூகத் துரோகிகள் என்று கர்ஜிப்பவர். ரோசம் மானம் இருந்தால் அரசை விட்டு வெளியேற வேண்டும் என்று கூறி வருபவர். ஆனால் அவர் ஜனாதிபதியின் செல்லப் பிள்ளை என்பது எல்லோருக்கும் தெரிந்த பரம ரகசியம்.

    தனத See More

  • Mhd Azees · Kurinchakerny Arafa MV – Kinniya

    ரங்கா ஒரு ரா வேட்டை பூனை ரகசியமாக பண பெட்டி போசனம் இவைகளை இழுத்துக்கொண்டு எமது தலைவர்களை பிரித்து. கொம்பு சீவி விடும் வேலைதான் இப்போது நடந்தேருகிறது தெரிகிறது இவைகளை உணர்ந்து பிளவு படும் தலைமைகளுக்கு புத்தி வராவிட்டால் இவர்களை மக்கள் கை விட்டு விடுவார்கள் நல்லது கெட்டதை மக்கள் இனங் கண்டு முடிவாகிவிட்டது .முஸ்லீம் அனேக அரசியல் தலைவர்கள் நட்டாத்தில் நீந்தி கொண்டிருக்கிறார்கள் எந்த கரையை எட்டுவது என்பதில் இன்னும் ஒரு தீர்வு கிடையாது புதினமான தலைவர்கள்.

TPN NEWS

SHARE