பாதுகாப்பு அமைச்சராக சரத் பொன்சேகா நியமனம்

445

 

குடியுரிமை பறிக்கப்பட்டிருந்த ஜெனரல் சரத் பொன்சேகாவுக்கு அதனை மீண்டும் வழங்கிய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, அவரை புதிய அரசாங்கத்தின் பாதுகாப்பு அமைச்சராகவும் நியமித்துள்ளார்.
யுத்தம் நடைபெற்ற காலத்தில் 20 வருடங்களாக பாதுகாப்பு அமைச்சை ஆட்சியில் இருந்த ஜனாதிபதிகள் எவருக்கும் வழங்கவில்லை

நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியிடமே பாதுகாப்பு அமைச்சு இருந்து வந்தது. கட்சிக்குள்ளும் வெளியிலும் தமக்கு ஏற்படும் அச்சுறுத்தல்களில் இருந்து தற்காத்து கொள்ளவே அவர்கள் பாதுகாப்பு அமைச்சை தம்வசம் வைத்திருந்தனர்.

எனினும் மைத்திரிபால சிறிசேன, இராணுவத்தில் நீண்டகாலம் பணியாற்றிய சரத் பொன்சேகாவுக்கு அந்த பதவியை வழங்கியுள்ளார்.

SHARE