பாராளுமன்றத்தில் ஏற்பட்ட அமளி துமளியை அடுத்து சபையின் நடவடிக்கைகளை நாளை வரை துணை சபாநாயகர் சந்திம வீரக்கொடி ஒத்தி வைத்தார்.
பாராளுமன்றத்தில் பிணைபத்திரம் தொடர்பில் இன்று ஏற்பட்ட முறுகல் நிலையை அடுத்து சபையின் நடவடிக்கை ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.
மத்திய வங்கியின் ஆளுநர் அர்ஜூண மகேந்திரனை பதவி விலக்குமாறு கோரி பாராளுமன்றத்தில் பிரேரணை ஒன்று சமர்பிக்கப்பட்டது.
இப்பிரேரணையை காலதாமதமின்றி விவாதத்திற்கு எடுத்துக்கொள்ளுமாறு பாராளுமன்ற உறுப்பினர் தினேஷ் குணவர்தன கோரிக்கை முன்வைத்தார்.
இதனையடுத்து பாராளுமன்றில் மீண்டும் அமளி துமளி ஏற்பட்டதால் இரண்டாவது தடவையாகவும் பாராளுமன்றம் நாளை வரை ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.