புளொட் அமைப்பின் பிரதித் தலைவருக்கு தமிழ் அரசியல்வாதிகள் அஞ்சலி

62

 

புளொட் அமைப்பின் பிரதித் தலைவரும், ஜனநாயக தமிழ் தேசிய கூட்டமைப்பின் செயலாளருமான ஆர்.ஆர் (இராகவன்) என அழைக்கப்படும் வேலாயுதம் நல்லநாதரின் வித்துடல் கொழும்பு பம்பலப்பட்டியில் அமைந்துள்ள புளொட் காரியாலயத்தில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது.

இதன்போது, அவரது உடலுக்கு உயர்நீதிமன்ற நீதிபதி இளஞ்செழியன் அஞ்சலி செலுத்தியுள்ளார்.

அஞ்சலி செலுத்துதல்
மேலும், மீன்பிடி அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, நாடாளுமன்ற உறுப்பினர்களான செல்வம் அடைக்கலநாதன் மற்றும் எம்.ஏ.சுமந்திரன் ஆகியோர் அஞ்சலி செலுத்தினர்.

அதேநேரம், கட்சித் தலைவர்கள், ஊடகவியலாளர்கள், பொது அமைப்புக்களின் பிரதிநிதிகள், பொதுமக்கள் எனப் பெருமளவானோர் திரண்டு அஞ்சலி செலுத்தி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

SHARE