மகிந்த குடும்ப ஆட்சியில் இலங்கையில் இடம்பெற்ற பல விடயங்கள் அவர்களது ஆட்சி கவிழ்ப்பின் அவை ஒவ்வொன்றும் சாதாரண இலங்கை குடிமகனால் நினைத்து பார்த்திருக்க முடியாத ஊழல்களாக அமைந்துள்ளன.
அவ்விதம் இறுதி போரில் புலிகள் அழிக்க பட்ட பின்னர் இலங்கையின் பாதுகாப்புக்கு என புலிகளுடன் யுத்தம் இடம்பெற்று கொண்டிருந்த காலத்தை விட பல மடங்கு நிதி ஒதுக்க பட்டது.
எதிர்கட்சிகள் இதற்கு எதிராக கோசம் இட்ட போதும் பெரும்பான்மை பலத்துடன் ஆட்சியில் இருந்த மகிந்தாவை அசைக்க முடியவில்லை வெற்றிகரமாக அந்த வரவு செலவு அறிக்கை மேற்கொள்ள பட்டது இதன் பின்னர் நடந்த அந்த மரம விடயங்கள் இப்போதே எதிரணி ஊடகங்கள் மற்றும் மகிந்தவின் சக பாடிகளாக இருந்தவர்கள் ஊடாகவும்
முக்கிய இராணுவ தளபதிகள் வாயிலாகவும் வெளி வந்துள்ளன.
மிகையொலி விமானம் வாங்குவதாக கூறி பல விமானத்தின் பணங்களை சுருட்டி சில விமானங்கள் வீழ்ந்ததில் கூட கோத்தாபாய மீது ஐயம் இருப்பதும் குறிப்பிடத் தக்கது