மடு பெரிய பண்டிவிரிச்சான் மகா வித்தியாலய வருடாந்த இல்ல விளையாட்டு நிகழ்வு…
மடு பெரியபண்டிவிரிச்சான் மகா வித்தியாலய வருடாந்த இல்ல விளையாட்டு நிகழ்வு 06-02-2015 வெள்ளிக்கிழமை பிற்பகல் 1.30 மணியளவில் ஆரம்பமானது,
நிகழ்விற்கு பிரதம விருந்தினராக வடக்கு மாகாண மீன்பிடி, போக்குவரத்து, வர்த்தக வாணிபம், கிராம அபிவிருத்தி, வீதி அபிவிருத்தி மற்றும் மோட்டார் போக்குவரத்து அமைச்சர் பா.டெனிஸ்வரன் அவர்களும், சிறப்பு விருந்தினராக மடு கோட்ட உதவி கல்விப்பணிப்பாளர் திரு.எமிலியாம்பிள்ளை அவர்களும் கலந்து சிறப்பித்தனர்.
பாடசாலையின் அதிபர் அவர்களின் வேண்டுகோளுக்கிணங்க அமைச்சர் அவர்கள் அந்த பாடசாலைக்கு குடிநீர் தாங்கி அமைப்பதற்காக ரூபா இரண்டு இலட்சம் வழங்குவதாக வாக்களித்தார்.