மட்டக்களப்பு மாவட்டத்தின் வெல்லாவெளி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட தௌவுளானை மேய்ச்சல் தரையில் நேற்று(21) மாலை மின்னல் தாக்கம் காரணமாக 30மாடுகள் ஒரே தடவையில் உயிரிழந்துள்ளன.
மட்டக்களப்பு மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் நேற்று மாலை அதிகளவு மின்னல் தாக்கங்களும் ஒரு சில பகுதிகளில் மழையும் ஏற்பட்டுள்ளது.
30 மாடுகள்
இந்த நிலையில் மட்டக்களப்பு-அம்பாறை எல்லைப்பகுதியான தௌவுளானை மேய்ச்சல் தரை பகுதியில் மரங்களின் கீழ் நின்ற 30 மாடுகள் மின்னல் தாக்கத்தினால் உயிரிழந்துள்ளன.
குறித்த மேய்ச்சல் தரை பகுதியில் மாடுகளை மேய்க்கும் இரண்டு கால் நடை பண்ணையாளர்களின் மாடுகளே இவ்வாறு உயிரிழந்துள்ளன.
நஸ்டம்
இது தொடர்பில் போரதீவுப்பற்று பிரதேச செயலகம் மற்றும் கால்நடை திணைக்களம் ஆகியவற்றின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டுள்ளதாக கால்நடை பண்ணையாளர்கள் தெரிவித்துள்ளனர்.
மிகவும் கஸ்டமான சூழ்நிலையில் அன்றாடம் தொழிலுக்காக கொண்டு செல்லப்பட்ட மாடுகள் உயிரிழந்துள்ளதன் காரணமாக பல இலட்சம் ரூபா நஸ்டம் கால்நடை பண்ணையாளர்களுக்கு ஏற்பட்டுள்ளது.