மட்டக்களப்பு மேற்கு கல்வி வலயத்தில் புதிய அலுவலகக் கட்டிடம் திறந்து வைப்பு 

143

மட்டக்களப்பு மாவட்ட  மாவட்டத்தில் பொருளாதார நெருக்கடிக்கு மத்தியிலும் அரசாங்கத்தினால் பின் தங்கிய பிரதேச மாணவர்களின் கற்றல் செயற்பாடுகளை சிறப்பாக முன்னெடுக்கும் வகையில் அபிவிருத்தி திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. இதேவேளை கல்வி அமைச்சினால் இரண்டு கோடி ரூபாய் செலவில் நிர்மாணிக்கப்பட்ட அலுவலகக் கட்டிடத் திறப்பு விழா (18) நடைபெற்றது.

மட்டக்களப்பு மேற்கு வலயக்கல்விப் பணிப்பாளரும் கிழக்கு மாகாண கல்விப் பணிப்பாளருமான அகிலா கனகசூரியம் தலைமையில் இடம் பெற்ற இந்நிகழ்வில் பிரதம அதிதியாக முன்னாள் வலயக்கல்விப் பணிப்பாளர் கணபதிப்பிள்ளை பாஸ்கரன் கலந்து சிறப்பித்தார்.

அதிகள் வரவேற்பு, தேசிய கொடியேற்றம் தேசிய கீதம், வலய கீதம் இறை வணக்கம் போன்ற நிகழ்வுகளுடன் ஆரம்பமான இந்நிகழ்வில் பட்டிருப்பு  வலயக்கல்விப் பணிப்பாளா சி.சிறிதரன், முன்னாள் வலயக்கல்விப் பணிப்பாளர் கே.சத்தியநாதன் மற்றும் பொறியியலாளர்கள், பிரதிக்கல்விப் பணிப்பாளர்கள், உதவிக் கல்விப் பணிப்பாளர்கள் என பலர் கலந்து கொண்டனர்.

இதன்போது பாடசாலை மாணவர்களின் நடனங்களும் இடம்பெற்றது. இடப் பற்றாக்குறையுடன் இயங்கிவந்த இவ் கல்வி அலுவலகம், இப்புதிய கட்டிடம் அமையப் பெற்றதன் மூலம் இடவசதி ஒரளவு நிவர்த்தி செய்யப்பட்டுள்ளது. (S.Varatharajan Batticaloa)

 

SHARE