மதுவரித் திணைக்களத்தின் 4 அதிகாரிகள் உட்பட 8 பேர் கைது

59

 

நீர்கொழும்பு (Negombo) மற்றும் சிலாபம் (Chilaw) பகுதிகளில் இருந்து 45 கிலோகிராம் கேரள கஞ்சாவுடன் மதுவரித் திணைக்களத்தின் 04 அதிகாரிகள் உட்பட 8 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

பொலிஸாரின் போதைப்பொருள் ஒழிப்புப் பிரிவினரால் அவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

போதைப்பொருள் கடத்தல்
இதேவேளை, கைது செய்யப்பட்ட அதிகாரிகள் பயணித்த மதுவரித் திணைக்களத்திற்கு சொந்தமான வான் ஒன்றும் பொலிஸாரின் காவலில் வைக்கப்பட்டுள்ளது.

இலங்கையில் போதைப்பொருள் கடத்தல்களை எதிர்த்து யுக்திய அல்லது நீதி என்ற படை நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

இதற்கு மத்தியிலேயே போதைப்பொருளை தடுக்கும் நடவடிக்கைகளில் ஈடுபடும் அதிகாரிகளும் அதே குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

SHARE