மலையக ரயில் சேவைகள் அதிக மழை காரணமாக இரத்து…

477

மலையக ரயில் பாதையுடான அனைத்து ரயில் சேவைகளும் சீரற்ற காலநிலை காரணமாக இரத்து செய்யப்பட்டுள்ளதாக ரயில்வே கட்டுப்பாட்டு மத்திய நிலையம் குறிப்பிடுகின்றது.

மண்சரிவு மற்றும் வௌ்ளநிலை காரணமாக மலையக ரயில் பாதைகள் சில பாதிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இன்று காலை கொழும்பு கோட்டையில் இருந்து பயணத்தை மேற்கொள்ளத் தயாராக இருந்த பொடிமெனிக்கே மற்றும் கடுகதி ரயில்களும் இரத்துச் செய்யப்பட்டுள்ளன.

மேலும் கண்டியிலிருந்து கொழும்பு பயணத்தை மேற்கொள்ள தயாராக இருந்த ரயிலும் இரத்து செய்யப்பட்டுள்ளதாக ரயில்வே கட்டுப்பாட்டு மத்திய நிலையம் குறிப்பிடுகின்றது.

இதன் காரணமாக கொழும்பிலிருந்து பதுளை, கண்டி மற்றும் மாத்தளை ஊடாக பயணிக்கும் அனைத்து ரயில் சேவையும் இரத்து செய்யப்பட்டுள்ளன.

 

SHARE