29.04.2015 புதன்கிழமை இன்று காலை 10.00 மணியளவில் மாந்தை கிழக்கு பாலிநகரில் பிரதேச சபையினரால் அமைக்கப்பட்ட கடைத்தொகுதிகள் திறப்பு விழா நிகழ்வு நடைபெற்றது.
மேற்படி நிகழ்வு மாந்தை கிழக்கு பிரதேச சபை தவிசாளர் அ.தனிநாயகம் அவர்களின் தலமையில் நடைபெற்றது. இன் நிகழ்வில் பிரதம விருந்தினராக வடமாகாண முதலமைச்சர் கௌரவ வி.விக்கினேஸ்வரன அவர்களும், கௌரவ விருந்தினர்களாக வடமாகாணசபை உறுப்பினர் வைத்திய கலாநிதி சி.சிவமோகன் அவர்களும், யாழ்மாவட்ட நாடாளமன்ற உறுப்பினர் சிறீதரன், மற்றும் வன்னி மாவட்ட நாடாளமன்ற உறுப்பினர் வினோ, வடமாகாணசபை உறுப்பினர் லிங்கநாதன் மற்றும் பலர் கலந்து சிறப்பித்தனர்.