மாவை.சேனாதிராஜா தலைமையில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் உள்ளூராட்சி சபை உறுப்பினர்களுக்கான கலந்துரையாடல் வலிகாமம் தெற்கு பிரதேசசபை மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்றுக்கொண்டு இருக்கின்றது.

418

 

 இலங்கைத் தமிழரசுக்கட்சியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான மாவை.சேனாதிராஜா தலைமையில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் உள்ளூராட்சி சபை உறுப்பினர்களுக்கான கலந்துரையாடல் வலிகாமம் தெற்கு பிரதேசசபை மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்றுக்கொண்டு இருக்கின்றது.

இதில் பாராளுமன்ற உறுப்பினர் சி.சிறீதரன் அவர்களும் இலங்கைத் தமிழரசுக்கட்சியின் பொதுச்செயலாளரும் கிழக்கு மாகாணசபை உறுப்பினருமான துரைராஜசிங்கம் அவர்களும் கலந்துகொண்டுள்ளனர்.

குறிப்பாக தலைவர் மாவை.சேனாதிராஜா அவர்கள் ஜனாதிபதித் தேர்தல் பற்றியும் உள்ளூராட்சி சபைகள் எதிர்நோக்கும் பிரச்சனைகள், அபிவிருத்தித் திட்டங்கள் பற்றியும் உறுப்பினர்களுடன் கலந்துரையாடிவருகின்றார்.

 

SHARE