முச்சக்கரவண்டி- டீமோ பட்டா விபத்தில் சிறுவன் காயம்
வவுனியா உள்வட்ட வீதி சிந்தாமணி பிள்ளையார் கோவிலுக்கு
அருகாமையில் புகையிரத நிலைய வீதியால் வந்த முச்சக்கரவண்டியும் உள்வட்ட
வீதியால் வந்த டீமோ பட்டாவுமே மோதிக் கொண்டன. இன்று
07.06.2015 காலை இடம்பெற்ற இவ் விபத்தில் முச்சக்கரவண்டியில்
பயணித்த எஸ். ஆகஸ் 5 வயது சிறுவன் காயமடைந்து வைத்தியசாலையில்
சேர்க்கப்பட்டார். வவுனியா போக்குவரத்து பொலிசார் மேலதிக
விசாரணையினை மேற்கொண்டு வருகின்றனர்.