முன்னாள் காதலன் மற்றும் 6 நபர்களால் பாலியல் பலாத்காரம் செய்யபட்டதாக பமீலா ஆண்டர்சன் தகவல்

528

1992-ல் வெளிவந்த ‘பேவாட்ச்’  தொடர் மூலம் புகழ் பெற்றவர் பமீலா ஆண்டர்சன்  பின்னர் அவர் ஹாலிவுட்டிலும் பல படங்கள் நடித்தார். பமீலா  மூன்று முறை திருமணம் செய்து விவாகரத்து செய்து உள்ளார். இவரது முதல் கணவர் பிரபல டிரம்ஸ் இசைக்கலைஞர் மோட்லே டாமி லீ. இவர்களுக்கு பிரான்டன் (12), டைலன் (11) என இரண்டு குழநதைகள் உள்ளனர் இவரை தொடர்ந்து நடிகரும்,ராப் பாடகர் கிட் ராக் மற்றும் சமூக சேவகருமான, ரிக் சாலமனை 2007 இல் திருமனம் செய்து கொண்டார் ஆகியோர் மணந்து பின்னர் விவகாரத்து பெற்றார்.

ரிக்குக்கு, பமீலா 2-வது மனைவி ஆவார். ஏற்கனவே நடிகை ஷானன் டொஹர்த்தியுடன் 9 மாதங்கள் குடும்பம் நடத்தி விட்டுப் பிரிந்தார். அதன் பின்னரே பமீலாவை மணந்தார்.பமீலாவுக்கும், ரிக் சாலமோனுக்கும் கடந்த ஆண்டு அக்டோபர் 6ம் தேதி லாஸ் வேகாஸில் கல்யாணம் நடந்தது. அதன் பின்னர் டிசம்பர் 13ம் தேதி இருவரும் பிரிந்து விட்டனர்.

2009-ல் பமீலா நான்காவதாக பமீலாவின் உடை தயாரிப்பளரும், பிரபல பேஷன் டிசைனருமான் ரிச்சி ரிச்யை திருமணம் செய்து கொண்டார்.பின்னர் அவரிடம் இருந்து பிரிந்தார்.

சமீபத்தில் மீண்டும் தனது  2-வது கணவர் ரிக் சாலமனை மீண்டும் திருமணம் செய்து
கொண்டார்.

பிரான்சில் நடந்த கேன்ஸ் படவிழாவில் கலந்து கொண்ட பமீலா ஆண்டர்சன் , பமீலா அறக்கட்டளை சார்பில் விழாவில் விலங்குகளுக்கான புதிய தொண்டு நிறுவனம் ஒன்றை தொடங்கி வைத்தார் அப்போது பேசிய அவர் நான் இந்த உலகிறகு தேவை என கூறினார்.  எனது கடந்த கால நினைவுகளை  வெளிப்படுத்த இது ஒருரு சிறந்த நேரம் எனகூறினார். அவரை அவரது நணபரின் நண்பரும் , அவரது முன்னாள் கதாலன் மற்றும்  6 பேர் பேரும் அவரை  பாலியல் பலாத்காரம் செய்ததாக கூறினார்.

மேலும் அவர் கூறும் போது ,எனது  குழந்தை பருவத்தில் நான்  சந்தோசமாக இருந்தது இல்லை.  நான் 6 வயதிலேயே பாலியல் பலாத்காரத்திற்கு உட்படுத்தபட்டேன்.
நான் எனது காதலர் வீட்டுக்கு சென்ற போது அவரது மூத்த சகோதரர் என்னை பாலியல் பலாத்காரம் செய்தார்.அபோது அவருக்கு வயது 25 எனக்கு 12. நாம் கடினமான நேரங்களில் தான் மனிதர்கள் மீது நம்பிக்கை வைக்க வேண்டும்.கொடூரமான பாலியல் பலாத்காரங்களில் தான் மனிதர்கள் மீது நம்பிக்கை போகிறது.

என்னுடைய நாட்டம் எல்லாம் விலங்குகள் மீது அன்பு செலுத்துவது.இது எனக்கு இயற்கையாகவே உள்ளது.எனது புதிய தொண்டு நிறுவனத்தின் நோக்கம் சுற்று சூழலைபாதுகாப்பது,   மனித உரிமைகள் மற்றும் விலங்குகள் உரிமைகளை பாதுகாப்பதாகும்.என கூறினார்

SHARE