மூச்சுவிடுவதில் சிரமம்.. கேப்டன் விஜயகாந்துக்கு மூன்றாவது நாளாக தொடரும் சிகிச்சை

89

 

நடிகர் விஜயகாந்த் கடந்த சில ஆண்டுகளாகவே உடல்நல குறைவு காரணமாக மருத்துவ சிகிச்சை பெற்று வருகிறார்.

கடந்த சில நாட்களுக்கு முன் திடீரென மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட விஜயகாந்த், வழக்கமான சிகிச்சைக்காக தான் அனுமதிக்கப்பட்டுள்ளார் என தேமுதிக சாரிப்பில் இருந்து கூறப்பட்டது. ஆனால், அதன்பின் வெளிவரும் செய்திகள் சற்று அதிர்ச்சியை கொடுக்கிறது.

மூச்சுவிடுவதில் சிரமம்
மூத்த நடிகரும், தேமுதிக கட்சியின் தலைவருமான விஜயகாந்த் கடந்த மூன்று நாட்களாக மருத்துவமனையில் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகிறார்.

இந்நிலையில் சளி, காய்ச்சல் மற்றும் இருமல் காரணமாக விஜயகாந்துக்கு மூச்சி விடுவதில் சிரமம் ஏற்பட்டுள்ளதாம். இதனால் அவருக்கு செயற்கை சுவாசம் அளிக்கப்பட்டு வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

கூடிய விரைவில் அவர் சிகிச்சை நல்லபடியாக முடிந்து குணமடைந்து வீடு திரும்புவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

SHARE