அநுராதபுரத்தில் இடம்பெற்ற கூட்டத்தில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவும் நாங்களும் அன்று கட்சியை விட்டு வெளியில் வந்ததும் நாங்கள் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி அல்ல என கூறியிருந்தார்கள். அன்று நாங்கள் அப்படி செய்திருக்காவிட்டால் இன்று ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி தோல்வியடைந்திருக்கும்.
அப்படி செய்யாமல் இருந்திருந்தால் 1994 ஆம் ஆண்டில் இருந்து பாதுகாத்து வந்த ஜனாதிபதி அதிகாரத்தை வேறு ஒரு கட்சிக்கு வழங்க நேரிட்டிருக்கும்.
கடந்த காலங்களில் ஐக்கிய தேசிய கட்சி தேர்தலில் வெற்றியடைந்த சந்தர்ப்பத்தில் சுதந்திர கட்சியினரை தாக்கினார்கள். ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி வெற்றியடைந்ததும் ஐக்கிய தேசிய கட்சியினரை தாக்கினார்கள் அவ்வாறானதொரு நல்லாட்சியா இன்று காணப்படுகின்றது?
இந்த இரண்டு கட்சிக்கும் இடையில் கடந்த காலங்களில் காணப்பட்டது வெறுப்பு மாத்திரமே ஆனால் இன்று சகோதரத்துவம் மாத்திரமே காணப்படுகின்றது. ஆனால் இந்த விடயத்தில் சிலர் இன்று குழம்பி போயுள்ளார்கள் என அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.