தொழில்நுட்ப திறன் சார் அபிவிருத்தியை முன்னெடுத்துச் செல்லும் கொள்கைக்கு
அமைவாக ஆரம்ப மற்றும் இடைநிலை பாடசாலைகளை மறுசீரமைக்கும் தேசிய
வேலைத்திட்டத்தின் கீழ் கல்வி அமைச்சின் நிதியுதவியுடன் நிர்மாணிக்கப்பட்ட
வவுனியா பூவரசங்குளம் மகாவித்தியாலயத்தில் அமைந்துள்ள தொழில்நுட்ப
ஆய்வுகூடம் இன்று 28-03-2015 கல்வி இராஜாங்க அமைச்சர் வேலுச்சாமி
இராதாகிருஸ்ணன் அவர்களால் திறந்து வைக்கப்பட்டது.
இன்நிகழ்வில் வன்னி பாராளமன்ற உறுப்பினர்களான சிவசக்தி ஆனந்தன்
,விநோதனேராலிங்கம் மற்றும் உனைஸ் பாறுக் வடமாகாணசபை உறுப்பினர்களான
தியாகராஜா,ஜெயதிலக மற்றும் வடமாகாண சுகாதார அமைச்சர் சத்தியலிங்கம்
ஆகியோர் கலந்துகொண்டிருந்தனர்.