தமிழரசுக்கட்சியின் வவுனியா மாவட்ட அலுவலகமான தாயகம் இன்று சனிக்கிழமை காலை 10 மணிக்கு திறந்து வைக்கப்பட்டது. இந்த அலுவலகத்தை தமிழரசுக்கட்சியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான மாவை சேனாதிராஜா திறந்துவைத்தார். இந்த நிகழ்வில் நாடாளுமன்ற உறுப்பினர் சி.சிறிதரன், வடமாகாண சபை அவைத் தலைவர் சீ.வீ.கே.சிவஞானம், மாகாண சுகாதார அமைச்சர் ப.சத்தியலிங்கம் உட்பட கட்சியின் பிரமுகர்கள், பொதுமக்கள் எனப் பலரும் கலந்துகொண்டனர்.