அவுஸ்திரேலியாவில் நடைபெற்ற T20 உலகக் கிண்ணப் போட்டியின் பின்னர் இலங்கை வீரர்கள் மீது சில விளையாட்டுத்துறை அதிகாரிகள் சுமத்தியுள்ள குற்றச்சாட்டுகள் குறித்து ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிடம் தெரிவிக்க இலங்கை கிரிக்கெட் அணி தயாராகி வருவதாக தெரியவந்துள்ளது.
அந்த குற்றச்சாட்டுகள் காரணமாக வீரர்கள் கடும் அழுத்தங்களுக்கு உள்ளாகியுள்ளதாகவும், அது தொடர்பில் ஜனாதிபதியிடம் அறிவிப்பதற்காக நேரத்தை ஒதுக்குமாறு கோருவதற்கு இலங்கை கிரிக்கட் அணி முயன்று வருவதாகவும் தெரிவிக்கப்படுகிறது.