வெள்ளாட்டில் இருந்து செம்மறி ஆடு உருவானது: ஆய்வில் தகவல்

574

வெள்ளாட்டில் இருந்து 40 லட்சம் ஆண்டுகளுக்கு முன்பு செம்மறி ஆடு உருவானது’’ என ஆய்வில் தெரிய வந்துள்ளது.

செம்மறி ஆடுகள் உருவானது குறித்து சமீபத்தில் விஞ்ஞானிகள் ஆய்வு மேற்கொண்டனர். அப்போது வெள்ளாடுகள் மற்றும் செம்மறி ஆடுகளின் மரபணு சோதனைகள் நடத்தப்பட்டன.

அதில் வெள்ளாடுகள் 40 லட்சம் ஆண்டுகளுக்கு முன்பு ஏற்பட்ட மரபணு மாற்றம் காரணமாக செம்மறி ஆடுகள் இனம் உருவானது கண்டுபிடிக்கப்பட்டது.

மேலும் செம்மறி ஆடுகளின் உடலில் வளரும் உரோமம் மற்றும் ஜீரண உறுப்புகளும் வெள்ளாட்டில் இருந்து மாறுபடுவது மரபணு மாற்றத்தின் காரணமே என்றும் விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர்.

SHARE