அகதிகளின் நலனுக்கு ரூ.116 கோடி ஒதுக்கீடு

268

 தமிழக பட்ஜெட் தாக்கல் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

இந்த பட்ஜெட்டை தாக்கல் செய்த நிதியமைச்சர் ஜெயக்குமார், தமிழ்நாட்டின் வளர்ச்சிக்கு ரூ.48 கோடி ஒதுக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.

மேலும், தமிழகத்தில் அகதிகளாக வசிக்கும் மக்களின் நலனுக்காக ரூ.116 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.

அகதிகளின் அடிப்படை தேவைகளை நிறைவேற்றுவதற்கு இந்த நிதி ஒதுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

107.5 கி.மீ தொலைவுக்கு 3 புதிய மெட்ரோ வழித்தடங்கள் அமைக்க நடவடிக்கை.

உதய் மின் திட்டத்தில் இணைந்ததால் கடன் வட்டி குறைந்து ரூ. 1,335 கோடி சேமிக்கப்படும்.

உலக முதலீட்டாளர்கள் மாநாட்டை இந்தாண்டு நடத்த ரூ.75 கோடி ஒதுக்கீடு.

சாலைகள் அகலப்படுத்த மற்றும் புதிய பாலங்கள் கட்ட ரூ.3,100 கோடி ஒதுக்கீடு.

100 யூனிட் இலவச மின்சாரத் திட்டம் தொடரும்.

நீர்வள ஆதராங்களுக்கு ரூ.4,500 கோடி ஒதுக்கீடு.

தோட்டக்கலை பயிர்களின் பரப்பளவை, 34 லட்சம் ஏக்கரில் இருந்து 39 லட்சம் ஏக்கராக உயர்த்தப்படும்.

உலகவங்கி உதவியுடன் ரூ. 3,042 கோடியில் நீர், நில வளத்துக்கு திட்டங்கள் செயல்படுத்தப்படும்.

தாமிரபரணி, நம்பியாறு அணைகளை இணைப்புக்கு ரு.300 கோடி.

சென்னை, புறநகர் சாலைத் திட்டங்களுக்கு ரூ.744 கோடி.

ராமநாதபுரம் மூக்கையூரில் புதிய மீன்பிடி துறைமுகம்.

குடிமராமத்து பணிகளுக்காக ரூ.300 கோடி ஒதுக்கீடு.

சாலை பாதுகாப்புக்கு ரூ.100 கோடி ஒதுக்கீடு.

ரேஷன் கடையில் பருப்புகள் தொடர்ந்து மானிய விலையில் வழங்கப்படும்.

உணவுப் பொருள் மானியத்துக்காக ரூ.5,500 கோடி ஒதுக்கீடு.

அரசின் சார்பில் விலைக் கட்டுப்பாடுக்கு புதிய பொருள்கள் விற்கப்படும்.

ஏழைகளுக்கு 12,000 பசுகள், 6,000 ஆடுகள் வழங்கப்படும்.

கடல் அரிப்பை தடுக்க ரூ.20 கோடியில் புதிய தொழில்நுட்பம் ஏற்படுத்தப்படும்.

கோழிப்பண்ணை வளர்ச்சிக்கு ரூ.25 கோடி ஒதுக்கீடு

2 லட்சம் விவசாயிகள் பயன்படும் வகையில் உழவர் உற்பத்திக் குழு அமைக்கப்படும்.

உழவர் பாதுகாப்புத் திட்டத்தின் கீழ் நலிந்தோர் நிவாரண உதவி ரு.20,000 ஆக உயர்வு.

பயிர் காப்பீடு மானியத்திற்கு ரூ. 522 கோடி நிதி ஒதுக்கீடு

பள்ளிக் கல்வித்துறைக்கு ரு.26,932 கோடி.

விதை உற்பத்தியை வலுப்படுத்த ரூ.50 கோடியில் திட்டம்.

ஆவின் பால் பொருள்களை பிரபலப்படுத்த 200 புதிய பாலகங்கள்.

நாட்டு மாடு இனப்பெருக்கத்துக்கு புதிய திட்டம்.

வேளாண் இயந்திரங்களை வாடகைக்கு விட கூடுதலாக 500 மையங்கள் அமைக்கப்படும்.

உழவர் உற்பத்திக் குழுவுக்கு ரூ.100 கோடி.

2 லட்சம் விவசாயிகள் பயயன்படும் வகையில் உழவர் உற்பத்திக் குழு

உழவர் பாதுகாப்புத் திட்டத்தின் கீழ் நலிந்தோர் நிவாரண உதவி ரு.20,000 ஆக உயர்வு.

பயிர் காப்பீடு மானியத்திற்கு ரூ. 522 கோடி நிதி ஒதுக்கீடு

பள்ளிக் கல்வித்துறைக்கு ரு.26,932 கோடி

பிற்படுத்தப்பட்டோர் நலனுக்கு ரூ.988 கோடி நிதி

2017-18-ல் 100 லட்சம் மெட்ரிக் டன் உணவு தானியங்களை தயாரிக்க திட்டம்.

10,500 புதிய காவலர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

தீயணைப்புத்துறைக்கு ரூ.253 கோடி

இளைஞர் நலன், விளையாட்டுத்துறைக்கு ரூ.165 கோடி.

ஆதி திராவிடர் நலன்துறைக்கு ரூ.3,009 கோடி

இ- சேவை மையங்கள் மூலம் 500 விதமான சேவைகள்.

ஏழைக்குடும்பங்களுக்கு 3.5 லட்சம் வீட்டுமனைப் பட்டா வழங்கப்படும்.

ஐடி துறைக்கு ரூ.116 கோடி

போக்குவரத்துறைக்கு ரூ.2,191 கோடி

100 நாள் வேலை திட்டத்திற்கு ரூ. 1,000 கோடி

கால்நடை பராமரிப்புக்கு ரூ. 1,161 கோடி

உட்கட்டமைப்பு மேம்பாட்டு நிதியாக ரூ. 200 கோடி ஒதுக்கீடு

நெடுஞ்சாலை துறைக்கு 10,067 கோடி ஒதுக்கீடு

குடிநீர் பற்றாக்குறையை சமாளிக்க ரூ.615 கோடி

மாநில பொருட்கள் மற்றும் சேவைகள் மீதான வரிக்கான சட்டத்தை மாநில அரசு இயற்றும் – அமைச்சர் ஜெயக்குமார்

தமிழகத்தில் ரூ.13,14,366 கோடி கடன் உள்ளது

முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவை புகழ்ந்து பேசிய அமைச்சர் ஜெயக்குமார், அதிமுக பொதுச் செயலாளர் சசிகலா, துணை பொதுச் செயலாளர் தினகரனுக்கு நன்றி தெரிவித்தார், இதற்கு திமுகவினர் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.

தமிழக சட்டசபையின் பட்ஜெட் கூட்டத்தொடர் சரியாக 10.30 மணியளவில் தொடங்கியது.

தமிழக நிதிநிலை அறிக்கையை தாக்கல் செய்வதற்காக சட்டசபை கிளம்பிய நிதியமைச்சர் டி.ஜெயக்குமார் ஜெயலலிதா நினைவிடத்துக்கு சென்று அஞ்சலி செலுத்தினார், நிதிநிலை அறிக்கை அடங்கிய பெட்டியை ஜெயலலிதாவின் சமாதியில் வைத்து வணங்கினார்.

SHARE